ஈரோடு மாவட்டத்தின் தலைநகரான ஈரோடு நகரத்தின் பிரதான சாலையான மீனாட்சி சுந்தரனார் சாலையில் ஈரோடு நகராட்சிக்கு எதிராக வடக்கு நோக்கி அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் முற்பகுதியில் சிங்க வாகனமும், துாரியும், அழகுற விளங்குகிறது. துவாரபாலர்களாக ஆண், பெண் பூதங்கள் பெரிய அமைப்பில் இருபுறமும் விளங்குகிறது. வேப்பமரத்தை தல விருட்சமாக கொண்டது இத்திருக்கோயில் ஆகும். இங்கு பரசுராமர் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு பிரகாரத்தில் மேற்கு நோக்கி வணங்கிய நிலையில் ஒரு பெண் அடியார் சிலை நாச்சியார் என்று அழைக்கின்றனர். மேற்கு பிரகாரத்தில் பட்டாலம்மன் எழுந்தருளியுள்ளார். இத்திருக்கோயிலின் முக்கிய திருவிழா பங்குனித் தேர்விழா ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி முதல் செவ்வாய்கிழமை திருவிழா ஆரம்பித்து அன்று இரவு பூச்சாட்டுதலுடன் நடைபெறும். பின்...