அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் திருக்கோயில், Kodumudi - 638151, ஈரோடு .
Arulmigu Magudeshwarar And Veeranarayana Perumal Temple, Kodumudi - 638151, Erode District [TM010235]
×
Temple History
தல பெருமை
திருப்பாண்டி கொடுமுடி மும்மூர்த்திகள் ஸ்தலம்
பிரம்ம தேவரின் சாப விமோசனம் பெற்ற இடம். சிவ பெருமானை நோக்கி பிரம்ம தேவர் தவம் இயற்றியதால் மனம் குளிர்ந்த சிவ பெருமான் இங்கு பிரம்ம தேவருக்கு ஆலயம் அமைய அருளினார்.
இத்தலத்தின் சிவபெருமான் மகுடேசுவரர் என அழைக்கப் படுகிறார். அகஸ்தியருக்கு மணக்கோலம் அருளியதால் சிவ பெருமானின் வலப்புறத்தில் வடிவுடைய நாயகி மணமகள் போல காட்சி தருகிறார்.
தல விநாயகராகிய காவிரி கண்ட விநாயகர் அகத்தியரின் கமண்டலத்திலிருந்து காவிரியை இத்தலத்தில் விடுவித்ததற்கு ஆதாரமாக எதிர் கரையில் அகத்தியர் பாறை சிற்பங்களுடன் அமைந்துள்ளது. இத்தலத்தில் காவிரியாறு தெற்கிலிருந்து கிழக்காக சோழ நாடு நோக்கி செல்கிறது.
3000 வருடங்கள்...திருப்பாண்டி கொடுமுடி மும்மூர்த்திகள் ஸ்தலம்
பிரம்ம தேவரின் சாப விமோசனம் பெற்ற இடம். சிவ பெருமானை நோக்கி பிரம்ம தேவர் தவம் இயற்றியதால் மனம் குளிர்ந்த சிவ பெருமான் இங்கு பிரம்ம தேவருக்கு ஆலயம் அமைய அருளினார்.
இத்தலத்தின் சிவபெருமான் மகுடேசுவரர் என அழைக்கப் படுகிறார். அகஸ்தியருக்கு மணக்கோலம் அருளியதால் சிவ பெருமானின் வலப்புறத்தில் வடிவுடைய நாயகி மணமகள் போல காட்சி தருகிறார்.
தல விநாயகராகிய காவிரி கண்ட விநாயகர் அகத்தியரின் கமண்டலத்திலிருந்து காவிரியை இத்தலத்தில் விடுவித்ததற்கு ஆதாரமாக எதிர் கரையில் அகத்தியர் பாறை சிற்பங்களுடன் அமைந்துள்ளது. இத்தலத்தில் காவிரியாறு தெற்கிலிருந்து கிழக்காக சோழ நாடு நோக்கி செல்கிறது.
3000 வருடங்கள் கடந்த வன்னி மரம் தல விருட்சமாகும். ஒரு புறம் கிளைகள் முற்களுடன் மறுபக்கம் முற்கள் அற்றும் பூக்காமல் காய்க்காமல் பிரம்மாவின் நான்காவது முகமாக வழிபடபட்டு வருகிறது. இந்த மரத்தின் இலைகள் காவிரி நீருடன் கலசத்தில் எடுத்து செல்லப்பட்டு பங்குனி உத்திரம் மற்றும் பல்வேறு விசேஷங்களுக்கு பழநி முதல் பல தலங்களுக்கு அபிஷேகத்திற்கு பக்தர்களால் பாதயாத்திரையாக கொண்டு செல்லப்படுகிறது.
தலத்தின் மகாவிஷ்ணு வீரநாராயணர் வலப்புறம் துணைவியார் திருமங்கை நாச்சியாருடன் அருள்கிறார். வீரநாராயணப் பெருமாள் ஐந்தலை ஆதிசேஷனின் மேல் அனந்த சயன திருமேனியாக அருள்கிறார்.
இத்தலத்தின் வீர ஆஞ்சநேயர் கரத்தில் சௌகந்திகா மலருடன் வடக்கு நோக்கிய பார்வையாக நிருதி மூலையில் அமைந்துள்ளது மிகச்சிறப்பு.
இத்தலத்தின் சனிபகவான் வலதுகரத்தில் சூலமும் இடதுகரத்தில் நாகமும் கொண்டு வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கிய பார்வையாக அமைந்துள்ளது. மேலும் அவிட்ட நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய தலமாக அமைய சனிபகவானின் அமைப்பு ஒரு காரணமாகும்.
மூலவர் மகுடேசுவரர் சுயம்பு லிங்க திருமேனியாக ஆவடை அமைப்பில்லாமல் சதுஸ்ர பீடம் அமைப்பில் லிங்கத்தின் மேல் அகத்தியருடைய கை வடு அடையாளத்துடன் காட்சி தருகிறார். அபிஷேக நேரத்தில் காண இயலும்.
மூலவர் மகுடேசுவரர் பரிவாரத்தில் காவிரி கண்ட கணபதி, சேமாஸ்கந்தர், அகஸ்தீசுவரர், கஜலட்சுமி, மகாவிஷ்ணு, பிரம்மா, சுப்ரமணியர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நாயன்மார்கள், நடராஜர் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோருடன் அமையப்பெற்றுள்ளார்.
இத்தலம் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய தேவார மூவரால் பாடல் பெற்றது. இத்தலத்தினுடைய பெருமையாக நமச்சிவாய திருப்பதிகம் சுந்தரரால் பாடப்பெற்ற பெருமை கொண்டது. மேலும் தலத்தின் முருகப்பெருமானை அருணகிரி நாதர் இரண்டு திருப்புகழ்களால் போற்றுகிறார்.
சில்ப சாத்திரங்களில் சதுர்முக தாண்டவ மூர்த்தி (குஞ்சிதபாதர் முயலகனின்றி) எனப்படும் நடராஜ மூர்த்தியின் மற்றோர் நடனக்கோலம் இருப்பது இங்கு பெருமையானது. இவருக்கு சித்திரா பௌர்ணமியன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.
இத்தலத்தின் வடிவுடைய நாயகி வலப்புறம் அமைந்து சோமநந்தி, வல்லபை கணபதி, சோழீஸ்வரர், விசுவேஸ்வரர், விஸ்வநாதர், விசாலாட்சி, சரஸ்வதி, சப்தமாதர், சண்டிகேஸ்வரி ஆகிய பரிவாரங்களுடன் அருள்கிறார்.
கிழக்கு நோக்கி மூன்று இராஜகோபுர வாயில்கள் கொண்ட ஒரே கோயில் என்ற பெருமை கொண்டது. ஆவணி மாதம் மற்றும் பங்குனி மாதங்களில் சூரிய கதிர்கள் இராஜகோபுரத்தின் துளை வழியாக முறையே மகுடேசுவரர், வீரநாராயணப் பெருமாள், திருமங்ககை நாச்சியார், வடிவுடையநாயகி ஆகியோரின் மூலத்திருமேனி மேல் வீழ்ந்து அருள்வது சூரிய பூஜை எனப்படும். இதை காண்போர் மிகவும் பேறுபெற்றோர் ஆவர்,
இக்திருக்கோயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் மூன்றினால் பெருமை பெற்றது. புண்ணிய நதி காவிரி தவிர தேவ தீர்த்தம், பரத்துவாஜ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் கோயிலுக்குள் அமைந்துள்ளது.
மும்மூர்த்திகளின் ஒருங்கிணைந்த இத்திருக்கோயில் அமைப்பு பக்தர்களின் பல்வேறு துயரங்கள், தடைகள் பாவங்களை தீர்க்க தோஷ பரிகாரம், நவகிரக ஹோமம் போன்ற வழிபாட்டு முறைகளை கொண்டுள்ளது. பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகம் மேற்படி பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செவ்வனே செய்துள்ளது.
தொல்லியலாளர்கள், மானுடவியலாளர்கள் ஆகிய திருவாளர்கள் மெக்கன்சி, பிரான்சி புக்கனன், டக்லஸ் பெர்ரட் ஆகியோர் தங்களுடைய கால வரலாற்று குறிப்பில் இத்திருக்கோயிலை பெருமையாக புகழ்ந்துள்ளனர்