திருப்பாண்டி கொடுமுடி மும்மூர்த்திகள் ஸ்தலம் பிரம்ம தேவரின் சாப விமோசனம் பெற்ற இடம். சிவ பெருமானை நோக்கி பிரம்ம தேவர் தவம் இயற்றியதால் மனம் குளிர்ந்த சிவ பெருமான் இங்கு பிரம்ம தேவருக்கு ஆலயம் அமைய அருளினார். இத்தலத்தின் சிவபெருமான் மகுடேசுவரர் என அழைக்கப் படுகிறார். அகஸ்தியருக்கு மணக்கோலம் அருளியதால் சிவ பெருமானின் வலப்புறத்தில் வடிவுடைய நாயகி மணமகள் போல காட்சி தருகிறார். தல விநாயகராகிய காவிரி கண்ட விநாயகர் அகத்தியரின் கமண்டலத்திலிருந்து காவிரியை இத்தலத்தில் விடுவித்ததற்கு ஆதாரமாக எதிர் கரையில் அகத்தியர் பாறை சிற்பங்களுடன் அமைந்துள்ளது. இத்தலத்தில் காவிரியாறு தெற்கிலிருந்து கிழக்காக சோழ நாடு நோக்கி செல்கிறது. 3000 வருடங்கள்...