Screen Reader Access     A-AA+
அருள்மிகு செல்லியாண்டியம்மன் திருக்கோயில், Bhavani - 638301, ஈரோடு .
Arulmigu Selliyanidyamman Temple, Bhavani - 638301, Erode District [TM010242]
×
Temple History

தல வரலாறு

காவிரிக் கரையில் அமைந்த அழகான புண்ணிய தலம் இந்த கூடுதுறை பவானி. இந்த பவானியில் தான் மக்களையும் வியாபாரிகளையும் காக்கும் தெய்வமாக செல்லியாண்டி அம்மன் வீற்றிருக்கிறார். இவரே இவ்வூரின் காவல் தெய்வம் எனப் போற்றப்படுகிறார். மிகப் பரந்த விரிந்த பரப்பில் சுற்றிலும் வீடுகளும் கட்டடங்களும் திகழ பெரிய கோயிலாகத் திகழ்கிறது அம்பிகையின் இந்த திருக்கோயில். பவானியும் காவிரியும் இருபுறமும் ஓட நீரால் சூழப்பட்ட பகுதியில் கோயில் அமைந்துள்ளது. செல்லியாண்டி அம்மன் கோயில் மிகப்பெரியதாக இல்லை என்றாலும் அழகாகத் தெரியும். முகப்பில் ஐந்து கலசங்களுடன் கூடிய சிறிய கோபுரம். முதல் நிலையில் அம்பிகையின் சுதைச் சிற்பத்தைக் காணலாம். அம்மன் எட்டு கரங்களுடன் தம் கரங்களில் ஆயுதங்கள் திகழ அழகாகக் காட்சி அருள்கிறார். கோயிலின் மண்டபம் நீண்ட பெரிதாகச் செல்கிறது....