அருள்மிகு பிராட்டியம்மன் திருக்கோயில், -, Chennimalai - 638051, ஈரோடு .
Arulmigu Pirattiaman Temple, -, Chennimalai - 638051, Erode District [TM010305]
×
Temple History
தல வரலாறு
இந்த ஊர் தோன்றிய காலத்திலிருந்து சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே இத்திருக்கோயிலும் எடுக்கப் பெற்று குடுமை வேட்டுவக் கவுண்டர்களால் பக்தி சிரத்தையோடு இப்பிராட்டியம்மன் வழிபட்டு வரப்படுவது சிறப்புக்குரியதாகும். சோழன் புர்வ பட்டயம் இத்திருநகரின் முதலில் அமைந்திருந்து திருக்கோயில் பிராட்டியம்மன் கோயில்தான் என்று கூறுகிறது. சோழன் மலை திருக்கோயிலின் திருப்பணியினை துவங்கிடும் போது பிடாரியம்மன் எனும் பிராட்டியம்மனுக்கு நரபலிமுதலான நாலுபலியும் தந்து திருப்பணியினை துவக்கினான் என பட்டயம் கூறுகின்றது. இவ்வம்மனின் பெயரிலியே பிடாரியூர் மற்றும் காளிநகர் என அழைக்கப்படுகிறது.
பிராட்டியம்மன் திருக்கோயில் விமானம் சுமார் 75 அடி உயரமுடைய கருங்கற்களால் எடுக்கப்பட்டுள்ளது. அம்மனுக்குரிய கருவறையும், அதனை ஒட்டிய மகா மண்டபமும் இவ்வற்றோடு அழகிய திருச்சுற்றினையும் பெற்றுள்ளது.
பிராட்டியம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் 3 1/2 அடி உயரத்தில்...இந்த ஊர் தோன்றிய காலத்திலிருந்து சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே இத்திருக்கோயிலும் எடுக்கப் பெற்று குடுமை வேட்டுவக் கவுண்டர்களால் பக்தி சிரத்தையோடு இப்பிராட்டியம்மன் வழிபட்டு வரப்படுவது சிறப்புக்குரியதாகும். சோழன் புர்வ பட்டயம் இத்திருநகரின் முதலில் அமைந்திருந்து திருக்கோயில் பிராட்டியம்மன் கோயில்தான் என்று கூறுகிறது. சோழன் மலை திருக்கோயிலின் திருப்பணியினை துவங்கிடும் போது பிடாரியம்மன் எனும் பிராட்டியம்மனுக்கு நரபலிமுதலான நாலுபலியும் தந்து திருப்பணியினை துவக்கினான் என பட்டயம் கூறுகின்றது. இவ்வம்மனின் பெயரிலியே பிடாரியூர் மற்றும் காளிநகர் என அழைக்கப்படுகிறது.
பிராட்டியம்மன் திருக்கோயில் விமானம் சுமார் 75 அடி உயரமுடைய கருங்கற்களால் எடுக்கப்பட்டுள்ளது. அம்மனுக்குரிய கருவறையும், அதனை ஒட்டிய மகா மண்டபமும் இவ்வற்றோடு அழகிய திருச்சுற்றினையும் பெற்றுள்ளது.
பிராட்டியம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் 3 1/2 அடி உயரத்தில் சிற்ப வேலைப்பாடுகளோடு கூடிய அழகிய சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. அதன் எதிரிலேயே மஹா மண்டபத்தை கடந்து அதன் வாகனமாக சிம்ம வாகனம் மேல் விதானத்தோடு கூடி அழகுற வடிக்கப் பெற்றுள்ளது.
மஹா மண்டபத்தில் இடது புறமாக விநாயகர் சிலை கிழக்கு முகமாக உள்ளது. நுழைவாயிலை அடுத்து சிங்க வாகனத்தை மையமாக கொண்டு இரண்டு முனியப்பன்கள் வலது, இடதுபுறமாக மிகப் பெரிய உருத்தில் கதையினால் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சுற்றின் வழியாக இடது பக்கம் செல்லும்போது பழைய (பழங்காலத்து) பிராட்டியம்மனும், கன்னிமார்சுவாமிகளும் கிழக்கு முகமாக பிள்ளையார் சுவாமியும், அதனை அடுத்து கருப்பண்ண சுவாமியும் நிறுவப்பட்டுள்ளது.