ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சென்னிமலை நகரின் நடுநாயகமாக அமைந்துள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலைச் சுற்றி நான்கு ராஜ வீதிகள் அமைந்துள்ளன. அதன் வடக்கு ராஜ வீதியை ஒட்டி வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் மேற்குப் புறமாக ஸ்ரீ பிராட்டியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இதன் வாயில் ஈங்கூர் பெருவழியை நோக்கி உள்ளது.