தல வரலாறு
சென்னிமலை மேலப்பாளையத்தில் ஆதிநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. சீதேவி-பூதேவியர் இங்கு அலமேலு மங்கை நாச்சியார் என்ற திருப்பெயரில் தாயார்கள் எழுந்தருளியுள்ளனர். விசாலமான மிகப் பெரிய கோயில் வளாகத்தில் எழுந்தருளியிருக்க வேண்டிய எல்லாப் பரிவார மூர்த்தங்களையும் பெற்ற முழுமையான விண்ணகரமாக இது விளங்குகிறது.