அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயில், கேகே நகர், சென்னை - 600078, சென்னை .
Arulmigu Sakthi Vinayagar Temple, K.K.Nagar, Chennai - 600078, Chennai District [TM000115]
×
Temple History
தல வரலாறு
தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரம் தன் எல்லைகளை விரித்துக் கொண்டே போனது. மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பட்டணத்துப் பரப்பு பெருகியது மக்களும் பெருகினர் இந்த பெருக்கத்தின் வெளிப்பாட்டில் வெளிச்சமிட்டது தான் கே.கே.நகர். நகரின் சாலைகளும், வீதிகளும் தமிழ்ச் சான்றோர்களின் பெயர்களைத் தாங்கித்தாங்கி மகிழ்கின்றன. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது இந்த மண்ணின் பண்பாட்டு நெறி, இந்த உணர்வு இங்கு வசித்த பெரும்பகுதியான மக்களின் உள்ளத்தில் அலையாக அல்ல அனலாக எழும்பி வெளிப்பட்டது. 1971-ம் ஆண்டு ஜுன் 3-ம் நாள் இந்த மண்ணிற்கு மகத்துவம் பிறந்தன. ஆன்மீக நெறியாளர்களின் எண்ணங்கள் மறுமலர்ச்சி முளைத்தன. வழிபடும் தெய்வம் வரவேண்டும் நமக்கு என்ற சிந்தனை ஊர் மக்களிடம் சிறகு விரித்த...தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரம் தன் எல்லைகளை விரித்துக் கொண்டே போனது. மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பட்டணத்துப் பரப்பு பெருகியது மக்களும் பெருகினர் இந்த பெருக்கத்தின் வெளிப்பாட்டில் வெளிச்சமிட்டது தான் கே.கே.நகர். நகரின் சாலைகளும், வீதிகளும் தமிழ்ச் சான்றோர்களின் பெயர்களைத் தாங்கித்தாங்கி மகிழ்கின்றன. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது இந்த மண்ணின் பண்பாட்டு நெறி, இந்த உணர்வு இங்கு வசித்த பெரும்பகுதியான மக்களின் உள்ளத்தில் அலையாக அல்ல அனலாக எழும்பி வெளிப்பட்டது. 1971-ம் ஆண்டு ஜுன் 3-ம் நாள் இந்த மண்ணிற்கு மகத்துவம் பிறந்தன. ஆன்மீக நெறியாளர்களின் எண்ணங்கள் மறுமலர்ச்சி முளைத்தன. வழிபடும் தெய்வம் வரவேண்டும் நமக்கு என்ற சிந்தனை ஊர் மக்களிடம் சிறகு விரித்த நாள் கூட்டம் கூடியது. யாரை, வழிபடுவது ? என்ற வினாக்கள் பிறந்தன சக்தி பெற வேண்டுமானால் சக்தி தான் வழிபாட்டிற்குரிய தெய்வம் என்று முடிவாயிற்று.
எண்ணங்கள் இதய மகிழ்ச்சியோடு ஆன்மீகப் பற்றோடு செயல்படத் தொடங்கியது. சக்தி பீடம் அமைப்பதற்கு அஸ்திவாரம் தோண்டப்பட்டது. தோண்டினார்கள் தோண்டினார்கள் தொடரும் போது என்ன ஆச்சரியம் முளைவிட்ட அரசங்கன்றோடு சிதைந்த விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆஹா சக்தியை நினைத்தோம். விநாயகர் தென்பட்டாரே சக்தி விநாயகர் என்ற திருப்பெயரில் கோயிலாக எழுப்பப்பட்ட ஆலயம் தான் இந்த ஆலயம். இன்றும், விநாயகர் சன்னதியின் பின்புறம் அந்த அரசமரத்தைக் காணலாம். தோண்டும்போது தோன்றிய விநாயகருக்கு துவண்டு போகாமல் வழிபாடு செய்து வந்தனர். சக்தி தரும் விநாயகர் சக்தி தரும் விநாயகர் என்ற நம்பிக்கை தொடரத் தொடர கோயிலும் வளர்ந்தது. சக்தி விநாயகர் ஆலயம் என்பது கே.கே.நகருக்கே கோபுரமாக தெரிகிறது. ஆன்மீக அன்பர்கள் செல்வந்தர்கள் சில்லரை வியாபாரிகள் பாட்டாளிகள் என அத்துனை பேரும் சக்தி விநாயகர் அருளைப் பெற்று மகிழ்ந்தனர். அந்த மகிழ்ச்சியின் பெருக்கம் கோயிலின் பெருக்கம்.
இவ்வாறாக இத்திருக்கோயிலின் வரலாறு கூறப்படுகிறது.