அருள்மிகு ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில், வடபழநி, சென்னை - 600026, சென்னை .
Arulmigu Aathimoolaperumal Temple, Vadapalani, Chennai - 600026, Chennai District [TM000012]
×
Temple History
தல பெருமை
கஜேந்திரன் என்ற யானை தினமும் குளத்தில் நீராடி தாமரை புஷ்பங்களை பறித்து பெருமாளுக்கு சாற்றி பூஜை செய்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் நீராடிகொண்டிருந்த யானையை முதலை ஒன்று யானையின் கால்களை கவ்விகொண்டது.முதலை பிடியில் சிக்கிய யானை தன் பலத்தை கொண்டு பல ஆயிரம் வருடங்கள் போராடிய யானை வாலி பொறுக்க முடியாமல் தன்னையும் அறியாமல் ஆதிமூலமே என பிளரியது,யானை ஏதோ இதுவரை கேட்காத பெயரை கூறுகிறதே என்று பிரம்மாதி முனிவர்கள் முக்கோடி தேவர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், மஹாவிஷ்ணு கரூட வாகனத்தில் முக்கோடி தேவர்களுக்கு காட்சி அளித்து தன்னுடைய சக்ராஆயுதத்தால் முதலையின் சிரசை துண்டித்து யானைக்கு மோட்சம் அளித்த புராணமே கஜேந்திர மோட்சம் இந்த சம்பவத்தை இன்றும் பல...கஜேந்திரன் என்ற யானை தினமும் குளத்தில் நீராடி தாமரை புஷ்பங்களை பறித்து பெருமாளுக்கு சாற்றி பூஜை செய்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் நீராடிகொண்டிருந்த யானையை முதலை ஒன்று யானையின் கால்களை கவ்விகொண்டது.முதலை பிடியில் சிக்கிய யானை தன் பலத்தை கொண்டு பல ஆயிரம் வருடங்கள் போராடிய யானை வாலி பொறுக்க முடியாமல் தன்னையும் அறியாமல் ஆதிமூலமே என பிளரியது,யானை ஏதோ இதுவரை கேட்காத பெயரை கூறுகிறதே என்று பிரம்மாதி முனிவர்கள் முக்கோடி தேவர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், மஹாவிஷ்ணு கரூட வாகனத்தில் முக்கோடி தேவர்களுக்கு காட்சி அளித்து தன்னுடைய சக்ராஆயுதத்தால் முதலையின் சிரசை துண்டித்து யானைக்கு மோட்சம் அளித்த புராணமே கஜேந்திர மோட்சம் இந்த சம்பவத்தை இன்றும் பல வைஷ்ணவ திருக்கோவில்களில் வருடம் ஒருமுறை கஜேந்திர மோட்சத்தை இதே பெயருடன் உத்ஸவமாக நடத்தி வருகின்றனர். அப்பேர்ப்பட்ட கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுத்த வரதராஜ பெருமாள் (வடபழனி ) இத்திருதலத்தில் நமக்காக ஆதிமூலமே என்று யானை அழைத்த பேரில் இங்கே வீற்றிருப்பது மிக விஷேசம் மூலவர் பெருமைஅமர்ந்த நிலையில் சிம்மாசன பீடத்தில் மூலஸ்தானத்தில் ஆதிமூலப் பெருமாள் நம்மை ரட்சிக்கும் பொருட்டு இடது கையை நம்மை அழைத்து (ஆஸ்வனா ஹஸ்தம்). வலது கையால் அபயம் அளிப்பது. மேலும் இடது காலை மடித்துக்கொண்டு வலது காலை நமக்காக அளிப்பதும்.ஸ்ரீதேவி பூதேவி நச்சிமார்களும் வலது இடது அமர்ந்த நிலையிலும், தரிசனம் தருவது இத்திருக்கோவில் மூலவர் சிறப்புஅம்சமாகும்.உத்ஸவமூர்த்தி யானைக்கு மோட்சம் கொடுத்த காரணத்தால், தன் பெயருக்கு முன்னால் கஜேந்திரனை சேர்த்து கஜேந்திர வராதராஜனாக ஸ்ரீதேவி பூதேவி நச்சிமார்களுடன் சேவை சாதிக்கிறார்,ஸ்ரீஆதிலட்சுமிதாயார் தனி சன்னதியில் காட்சி அளித்து உச்சவமூர்த்தி தாயார் பெருந்தேவி தாயார் என்ற பெயருடன் விளங்குகிறார்