அருள்மிகு பொன்சோழீஸ்வரர் திருக்கோயில், Pazhamgarai, Avinashi - 641652, திருப்பூர் .
Arulmigu Ponsoleswarar Temple, Pazhamgarai, Avinashi - 641652, Tiruppur District [TM012968]
×
Temple History
தல பெருமை
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு பழங்கரை க்ஷேத்திரம் இங்கு எழுந்தருளியுள்ள இறைவனின் பெயரால் முன்தோன் றீஸ்வரம் என்று பிரசித்திபெற்று விளங்கியது. கொங்கு சோழர்கள் காலத்தில் திருப்பணிகள் பெருமளவில் செய்யப்பட்டதால் இத்தலப் பெருமானுக்கு சோழீஸ்வரர் என்ற திருப்பெயரும் பிற்காலத்தில் வழங்கலாயிற்று.
கோள்கள், இப்பேரண்டம், நட்சத்திரங்கள் ஆகியவை தோன்றுவதற்கு முன்பே உள்ளவன் திருக்கயிலைபதியான சிவபெருமான் என்பதால் பழங்கரை பெருமானுக்கு முன்தோன்றீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டதாக சிவஞான யோகிகள் அருளியுள்ளனர்.
பொன் சோழீஸ்வரர்
ஸ்ரீ தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கிறோம். கோயிலின் மேற்கில், ஆபத்து காத்த விநாயகர் அழகாக அமர்ந்த நிலையில் தரிசனமளிக்கிறார். இவருக்கு கிழக்குபுறத்தில் அக்னி மாநதி என்ற ஆறு ஓடுகிறது. பல தருணங்களில் மழையினால் வெள்ளம் ஏற்பட்ட காலங்களில் திருக்கோயிலையும், ஊரையும் இந்த விநாயகர் காப்பாற்றியதால் ஆபத்து காத்த விநாயகர் என்ற...சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு பழங்கரை க்ஷேத்திரம் இங்கு எழுந்தருளியுள்ள இறைவனின் பெயரால் முன்தோன் றீஸ்வரம் என்று பிரசித்திபெற்று விளங்கியது. கொங்கு சோழர்கள் காலத்தில் திருப்பணிகள் பெருமளவில் செய்யப்பட்டதால் இத்தலப் பெருமானுக்கு சோழீஸ்வரர் என்ற திருப்பெயரும் பிற்காலத்தில் வழங்கலாயிற்று.
கோள்கள், இப்பேரண்டம், நட்சத்திரங்கள் ஆகியவை தோன்றுவதற்கு முன்பே உள்ளவன் திருக்கயிலைபதியான சிவபெருமான் என்பதால் பழங்கரை பெருமானுக்கு முன்தோன்றீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டதாக சிவஞான யோகிகள் அருளியுள்ளனர்.
பொன் சோழீஸ்வரர்
ஸ்ரீ தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கிறோம். கோயிலின் மேற்கில், ஆபத்து காத்த விநாயகர் அழகாக அமர்ந்த நிலையில் தரிசனமளிக்கிறார். இவருக்கு கிழக்குபுறத்தில் அக்னி மாநதி என்ற ஆறு ஓடுகிறது. பல தருணங்களில் மழையினால் வெள்ளம் ஏற்பட்ட காலங்களில் திருக்கோயிலையும், ஊரையும் இந்த விநாயகர் காப்பாற்றியதால் ஆபத்து காத்த விநாயகர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
ஆங்கிலேய அதிகாரி பெற்ற பேறு
ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆட்சி செய்த காலத்தில், வெள்ளைக்கார உயரதிகாரி ஒருவர், ஊர் நிர்வாகத்தின் பொருட்டு பழங்கரையில் முகாமிட்டிருந்தார். அப்போது விடாமல் சில நாட்கள் பெருமழை பெய்ததால், அக்னி ஆற்றில் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டது. வெள்ளைக்கார அதிகாரியும், அவருடன் வந்திருந்த இதர அதிகாரிகள், சிப்பந்திகள் ஆகியோர் தங்கியி ருந்த கூடாரங்கள் அனைத்தையும் வெள்ளம் அடித்துச் சென்றது. அப்போது தங்களைக் காப்பாற்றும்படி அந்த விநாயகரை வேண்டி வழிபட்டார் அந்த ஆங்கிலேய உயரதிகாரி.
என்ன ஆச்சர்யம் உடனடியாக ஆற்று நீர் விலகி வழிவிட்டது. அதனால் வியப்பும், மகிழ்ச்சியும், பக்தியும் மேலிட, அவ்விநாயகரை ஆபத்து காத்த விநாயகர் என்று சொல்லி வணங்கினார். அதோடில்லாமல், அன்றுமுதல் இவ்விநாயகரின் பூஜை செலவிற்காக, நாள் ஒன்றிற்கு இரண்டு ரூபாய் நன்கொடை வழங்கவும் உத்தரவிட்டார் அந்தக் காலத்தில் இரண்டு ரூபாய் என்பது பெரிய தொகையாகும்.