அவிநாசிக்கு கிழக்கே, பழங்கரையில் அமைந்துள்ள பொன் சோழீஸ்வரர் கோவில், கி.பி., 10ம் நூற்றாண்டில் கொங்கு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட பெருமை வாய்ந்தது. பழங்கரையில் கோவில் கொண்டுள்ள இறைவனின் பெயர் முன் தோன்றீச்சுர முடையார் எனவும், இறைவியின் அம்மன் பெயர் சுரும்பார் பூங்குழலி அம்பிகை எனவும் அறியப்படுகிறது. சோழர் மற்றும் விஜயநகர மன்னர்கள் கால கல்வெட்டுகளில் பழங்கரை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.பண்டைய காலத்தில் பழனை என்ற பெயரால் புகழ்பெற்று விளங்கிய ஊரே இப்போது பழங்கரை என அழைக்கப்படுகிறது. பழங்கரையின் முன்தோன்றீஸ்வரமுடையார் திருக்கோயில் கல்வெட்டுகளில் இத்திருத்தலம் பழங்கராய நல்லூர், பழங்கரையூர் என்ற பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு பழங்கரை க்ஷேத்திரம் இங்கு எழுந்தருளியுள்ள இறைவனின் பெயரால் முன்தோன் றீஸ்வரம் என்று பிரசித்திபெற்று விளங்கியது. கொங்கு சோழர்கள்...