காங்கேயநல்லூர், சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் சம்புவராய மன்னரான சகலலோகச் சக்கரவர்த்திகள் வென்று மண் கொண்ட சம்புவராயின் 17-ஆம் ஆட்சியாண்டில் கி.பி.1346 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சுமார் 676 ஆண்டுகள் பழைமையான கோயிலாகும். இக்கோயிலின் வடக்குப்புறம் மற்றும் கிழக்குப்புறச் சுவர்களில் உள்ள கல்வெட்டுக்கள் இக்கருத்தினை உறுதி செய்கின்றது.இவ்வூரில் இருந்த திருவேங்கடமுடையான் என்பவர் தமது ஒரு காணி நிலத்தை 170 வீரசம்பன் குளிகை என்ற பணத்திற்கு விற்று ஸ்ரீமல்லி நாத சதுர் வேதிமங்கலம் மகா சபையாரிடம் கோயிலுக்கு தானமாக ஒப்படைத்ததை இக்கல்வெட்டு கூறுகின்றது. இக்கல்வெட்டு இந்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டு சாசனம் தொகுதி -1 ல் வரிசை எண் 52-ஆக வெளியிடப்பட்டடுள்ளது. இத்திருக்கோயிலுக்கு இராஜாகோபுரம் இல்லாததால் திருமுருககிருபானந்தவாரியார்...காங்கேயநல்லூர், சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் சம்புவராய மன்னரான சகலலோகச் சக்கரவர்த்திகள் வென்று மண் கொண்ட சம்புவராயின் 17-ஆம் ஆட்சியாண்டில் கி.பி.1346 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சுமார் 676 ஆண்டுகள் பழைமையான கோயிலாகும். இக்கோயிலின் வடக்குப்புறம் மற்றும் கிழக்குப்புறச் சுவர்களில் உள்ள கல்வெட்டுக்கள் இக்கருத்தினை உறுதி செய்கின்றது.இவ்வூரில் இருந்த திருவேங்கடமுடையான் என்பவர் தமது ஒரு காணி நிலத்தை 170 வீரசம்பன் குளிகை என்ற பணத்திற்கு விற்று ஸ்ரீமல்லி நாத சதுர் வேதிமங்கலம் மகா சபையாரிடம் கோயிலுக்கு தானமாக ஒப்படைத்ததை இக்கல்வெட்டு கூறுகின்றது. இக்கல்வெட்டு இந்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டு சாசனம் தொகுதி -1 ல் வரிசை எண் 52-ஆக வெளியிடப்பட்டடுள்ளது. இத்திருக்கோயிலுக்கு இராஜாகோபுரம் இல்லாததால் திருமுருககிருபானந்தவாரியார் சுவாமிகள் 3- நிலை இராஜகோபுரம் கட்டி திருப்பணி செய்து கொடுத்தார். இத்திருக்கோயிலின் இராஜகோபுரம் சுமார் 50-ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் திருப்பணிகள் பல செய்யப்பட்டு 01.07.1999-ல் சம்ரோஷணமும் பின்பு மீண்டும் பல திருப்பணிகள் செய்யப்பட்டு கடைசியாக 04.05.2012-ல் சம்ரோஷணமும் நடைபெற்றது.