அருள்மிகு சுந்தர வரதராஜபெருமாளும் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இத்திருக்கோயிலில் இரண்டு கால பூஜை நடைபெற்று வருகிறது. அதுத்தவிர சித்திரை மாதப்பிறப்பு, வைகாசி வசந்த உற்வசம் 5- நாள் கருட சேவை உற்சவம், புரட்டாசி மாதம் உற்வசம் 5- நாள், கார்த்திகை விஷ்ணு தீபம், தனூர் மாத பூஜைகள், வைகுண்ட ஏகாதேசி திருவிழா, சங்கராந்தி, போன்ற பல உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலில் கொடி மரம் இல்லாமல் இருந்து, கொடி மரம் திருப்பணியை ஊர்பொது மக்களால் செய்யப்பட்டு 28.10.2012 ல் கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.