அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வள்ளிமலை - 632520, வேலூர் .
Arulmigu Subramaniaswamy Temple, Vallimalai - 632520, Vellore District [TM001388]
×
Temple History
தல வரலாறு
வள்ளி பிறந்த ஊர்வள்ளி பிறந்த ஊர்
இலக்கிய பின்புலம்
தொண்டை நன்நாட்டில் அமுத வள்ளியும், சுந்தர வள்ளியும் முருகப்பெருமானை மணக்க வேண்டி தவமிருந்து சுந்தரவள்ளி வள்ளிமலையில் மான் வயிற்றில் கருவாகி உருவாகி வள்ளிக்கிழங்கு அடர்ந்த குழியில் பெண் குழந்தையாய் பிறந்தார். அச்சமயம் அப்பகுதியை ஆண்ட வேடுவர் குல அரசன் நம்பிராஜன் வேட்டைக்கு செல்லும்போது குழந்தையின் அழுகுரல் கேட்டு அப்பகுதிக்கு சென்று வள்ளி கொடியில் இருந்த குழந்தையை எடுத்து வள்ளி என பெயர்சூட்டி வளர்த்து வந்தார். வள்ளியம்மையும் நன்கு வளர்ந்து வேடர் குல வழக்கப்படி கல்பரண் மீது ஏறி நின்று ஆலோலம் பாடி தினைப்புனம் காத்து வந்தார். இதனை அறிந்த நாரதமுனிவர், முருகப்பெருமானிடம் சென்று தங்களை மணக்க வேண்டி வள்ளிமலையில் வள்ளி பிறந்து வளர்ந்துள்ளார் என்ற செய்தியை கூறினார். இதனை கேட்ட முருகப்பெருமான்...தொண்டை நன்நாட்டில் அமுத வள்ளியும், சுந்தர வள்ளியும் முருகப்பெருமானை மணக்க வேண்டி தவமிருந்து சுந்தரவள்ளி வள்ளிமலையில் மான் வயிற்றில் கருவாகி உருவாகி வள்ளிக்கிழங்கு அடர்ந்த குழியில் பெண் குழந்தையாய் பிறந்தார். அச்சமயம் அப்பகுதியை ஆண்ட வேடுவர் குல அரசன் நம்பிராஜன் வேட்டைக்கு செல்லும்போது குழந்தையின் அழுகுரல் கேட்டு அப்பகுதிக்கு சென்று வள்ளி கொடியில் இருந்த குழந்தையை எடுத்து வள்ளி என பெயர்சூட்டி வளர்த்து வந்தார். வள்ளியம்மையும் நன்கு வளர்ந்து வேடர் குல வழக்கப்படி கல்பரண் மீது ஏறி நின்று ஆலோலம் பாடி தினைப்புனம் காத்து வந்தார். இதனை அறிந்த நாரதமுனிவர், முருகப்பெருமானிடம் சென்று தங்களை மணக்க வேண்டி வள்ளிமலையில் வள்ளி பிறந்து வளர்ந்துள்ளார் என்ற செய்தியை கூறினார். இதனை கேட்ட முருகப்பெருமான் பூலோகத்திலுள்ள வள்ளிமலைக்கு வந்து வள்ளியை மணம் புரிய, அக்குறமகளிடம் வேடனாக, விருத்தனாக, வேங்கை மரமாக, முனிவராக அவதாரம் கொண்டு சோதித்தார். அப்போது முருப்பெருமானுக்கும், வேடுவர்களுக்கும் போர் நடந்து வேடர்கள் மயங்கி விழுந்தனர். ஸ்ரீவள்ளியும் முருகனை தவிர வேறு ஒருவரையும் மணக்க மாட்டேன் என உறுதியாக கூற முருக்பெருமான் மயக்கமான வேடர்களை மயக்கம் தெளிவித்து, வள்ளியை திருமணம் செய்து கொண்டார். இத்தனை சிறப்பு வாய்ந்த வள்ளிமலையைப் பற்றி அருணகிரி நாதரால் பாடப்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வள்ளிமலை திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் நீராழி மண்டபத்துடன் கூடிய சரவணப்பொய்கை எனும் தெப்பக்குளம் உள்ளது.