மிகவும் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் வள்ளியம்மை பிறந்த திருத்தலமாக வரலாற்று குறிப்புகள் கூறப்படுகிறது. முருகப்பெருமான் பூலோகத்திலுள்ள வள்ளிமலைக்கு வந்து வள்ளியை மணம் புரிய, அக்குறமகளிடம் வேடனாக, விருத்தனாக, வேங்கை மரமாக, முனிவராக அவதாரம் கொண்டு சோதித்தார். அப்போது முருப்பெருமானுக்கும், வேடுவர்களுக்கும் போர் நடந்து வேடர்கள் மயங்கி விழுந்தனர். ஸ்ரீவள்ளியும் முருகனை தவிர வேறு ஒருவரையும் மணக்க மாட்டேன் என உறுதியாக கூற முருக்பெருமான் மயக்கமான வேடர்களை மயக்கம் தெளிவித்து, வள்ளியை திருமணம் செய்து கொண்டார்