அருள்மிகு கொங்கணேஸ்வரர் திருக்கோயில், Thanjavur - 613009, தஞ்சாவூர் .
Arulmigu Konganeswarar Temple, Thanjavur - 613009, Thanjavur District [TM013977]
×
Temple History
தல பெருமை
ஶ்ரீ கொங்கணேஸ்வரர் பற்றிய புராணச் செய்திகள் பவிஷ்த்தர புராணத்தில் கொங்கணேஸ்வரர் மகாத்தியமாக தஞ்சாவூர் மகாத்மியம் என்ற வேத நாகரி ஏட்டுப் பிரிதியில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது, தத்தாத்ரேவருடைய சீரடான கொங்கணச் சித்தர் சிவபெருமானின் திருவுளப்படி இத்தலத்தில் தவம் புரிந்து கொங்கணம் என்ற சிவலிங்கத்தை பிரஷ்டை செய்து பூஜித்து கொங்கணேஸ்ரர் என போற்றி வந்துள்ளார் எனவும், அம்மன் பெயர் ஞானாம்பிகை என்றும் இப்புராணம் விவரித்துக் கூறுகின்றது,
மராட்டிய மன்னர் இரண்டாம் சிவாஜி அவர்கள் காலத்தில் (1832-1855) எழுதப்பட்டு நாடகமாக நடிக்கப்பட்டும் வந்த அன்னபூர்ண பரிநயமு என்ற தெலுங்கு காவியத்தில் மற்றொரு செய்தியும் காணக்கிடைக்கிறது, தஞ்சை நகர செட்டியார் ஒருவரின் வளர்ப்பு மகனான அன்னபூர்ண தேவி ஶ்ரீ கொங்கணேறுபவரரின் மீது அளவற்ற அன்பு கொண்டு...ஶ்ரீ கொங்கணேஸ்வரர் பற்றிய புராணச் செய்திகள் பவிஷ்த்தர புராணத்தில் கொங்கணேஸ்வரர் மகாத்தியமாக தஞ்சாவூர் மகாத்மியம் என்ற வேத நாகரி ஏட்டுப் பிரிதியில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது, தத்தாத்ரேவருடைய சீரடான கொங்கணச் சித்தர் சிவபெருமானின் திருவுளப்படி இத்தலத்தில் தவம் புரிந்து கொங்கணம் என்ற சிவலிங்கத்தை பிரஷ்டை செய்து பூஜித்து கொங்கணேஸ்ரர் என போற்றி வந்துள்ளார் எனவும், அம்மன் பெயர் ஞானாம்பிகை என்றும் இப்புராணம் விவரித்துக் கூறுகின்றது,
மராட்டிய மன்னர் இரண்டாம் சிவாஜி அவர்கள் காலத்தில் (1832-1855) எழுதப்பட்டு நாடகமாக நடிக்கப்பட்டும் வந்த அன்னபூர்ண பரிநயமு என்ற தெலுங்கு காவியத்தில் மற்றொரு செய்தியும் காணக்கிடைக்கிறது, தஞ்சை நகர செட்டியார் ஒருவரின் வளர்ப்பு மகனான அன்னபூர்ண தேவி ஶ்ரீ கொங்கணேறுபவரரின் மீது அளவற்ற அன்பு கொண்டு அவரையே மணக்க உறுதி பூண்டான், பெற்றோரும், உற்றோரும் இதற்கு மறுக்கவே, இறைனே ஒரு நாள் இரவில் அன்னபூர்ணி தேவியை மணம் முடித்து தமது இருப்பிடமான திருக்கோயிலுக்குள் அழைத்துச் சென்று விடுகிறார், மறுநாள் செட்டியாரும், பிறரும் அன்னபூர்ணி தேவியை வெளியில் அழைத்துச் செல்ல முயல கற்சிலையானதாக விவரிக்கப்பட்டுள்ளது,
இக்கோயிலில் ஶ்ரீ ஞானாம்பிகை அம்மன் சன்னதிக்கு கிழக்கே அன்னபூரணி தேவிக்கு என தனிச் சன்னதி ஒன்றும் கொங்கண சித்தருக்கு என தனிச் சன்னதியும் ஏற்படுத்தப்பட்டுளளன,