அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில், விளங்குளம் - 614612, தஞ்சாவூர் .
Arulmigu Atchaya Pureeshwarar Temple, Vilangulam - 614612, Thanjavur District [TM014068]
×
Temple History
தல வரலாறு
,உ
சிவமயம்
தென்னாடுடைய சிவனே போற்றி
அருள்மிகு அபிவிருத்தி நாயகி சமேத
அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில்
விளங்குளம்
அட்சய புரீஸ்வரரும் அபிவிருத்தி நாயகியும்
பட்சமூடன் ரட்சிப்பார் பக்தர்களை - யட்ச ஸ்ரீ
விளங்குளம் பதிவந்து வேண்டித் துதிப்போர்க்கு
வளங்கள் வளர்த்தோங்கும் வாய்மை இது
கோயில் அமைந்துள்ள இடம்
கடல் கிழக்கு தெற்கு கரை புரளும் வெள்ளாறு
குடதிசையில் கோட்ட கரையாம்
வடதிசையில் ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோணாட்டுக் கெல்லை எனச்சொல்
தஞ்சாவூரை ஆண்ட சோழ மன்னர்களில் இராஜராஜசோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் மிகச் சிறப்புடையதாக போற்றப்படுகிறது. விளங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அட்சயபுரீஸ்வரர் ஆலயமும் சோழ கால பாணியிலேயே அமைக்கப்பட்டுள்ளதால் இந்த ஆலயத்தை நிர்மாணித்தவரும் சோழ மன்னர்களின் சம காலத்தில் வாழ்ந்தவராக கருதப்படுகிறது.
சேது ரஸ்தா எனப்படும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ...,உ
சிவமயம்
தென்னாடுடைய சிவனே போற்றி
அருள்மிகு அபிவிருத்தி நாயகி சமேத
அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில்
விளங்குளம்
அட்சய புரீஸ்வரரும் அபிவிருத்தி நாயகியும்
பட்சமூடன் ரட்சிப்பார் பக்தர்களை - யட்ச ஸ்ரீ
விளங்குளம் பதிவந்து வேண்டித் துதிப்போர்க்கு
வளங்கள் வளர்த்தோங்கும் வாய்மை இது
கோயில் அமைந்துள்ள இடம்
கடல் கிழக்கு தெற்கு கரை புரளும் வெள்ளாறு
குடதிசையில் கோட்ட கரையாம்
வடதிசையில் ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோணாட்டுக் கெல்லை எனச்சொல்
தஞ்சாவூரை ஆண்ட சோழ மன்னர்களில் இராஜராஜசோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் மிகச் சிறப்புடையதாக போற்றப்படுகிறது. விளங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அட்சயபுரீஸ்வரர் ஆலயமும் சோழ கால பாணியிலேயே அமைக்கப்பட்டுள்ளதால் இந்த ஆலயத்தை நிர்மாணித்தவரும் சோழ மன்னர்களின் சம காலத்தில் வாழ்ந்தவராக கருதப்படுகிறது.
சேது ரஸ்தா எனப்படும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் புதுக்கோட்டை அறந்தாங்கி வழியாக கட்டுமாவடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், தஞ்சாவூர், பட்டுக்கோட்டையிலிருந்து தெற்கே 30 கி.மீ. தொலைவிலும், பேராவூரணியிலிருந்து தென்கிழக்கில் 15 கி.மீ. தொலைவிலும் விளங்குளம் கிராமம் அமைந்துள்ளது.
கோயிலின் தொன்மை
பிற்காலப் பாண்டியன் முதலாம் மாறவர்மன் பராக்ரம பாண்டியன் கி.பி. 1339 - ல் பிரமாதீச ஆண்டு, ஆனி மாதம் 25 - ம் தேதி இங்கு வந்து வழிபட்டு உள்ளார். பராக்ரம பாண்டியன் ஆட்சிக் காலம் கி.பி. 1335 முதல் 1362 வரை ஆகும். ஆகவே இங்குள்ள அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில் நிர்மாணிக்கப்பட்ட காலம் சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்தியதாக கருதலாம்.
(ஆதாரம்: திருக்கோயில் கல்வெட்டு)
விளங்குளம் கிராமப் பெயர்க்காரணம் புராண வரலாற்றின்படி இவ்வாறு அறியப்படுகிறது.
சூரிய தேவனின் மகன் சனீஸ்வரருக்கும். சூரிய தேவனின் இன்னொரு மகன் யமதர்ம ராஜனுக்கும் பகை உண்டு. அந்த பகையினால் எமதர்ம ராஜன் சனீஸ்வரரின் காலில் அடிக்க அதனால் ஊனம் ஏற்பட்டது. இதனால் கால் ஊனத்துடன் நிவாரணம் தேடி மானுட ரூபத்தில் சுரைக் குடுவையில் பிச்சை ஏந்தி பெற்று அந்த தானியங்களை சமைத்து அன்னதானமாக அளித்து வந்தார். அப்போது விளாமரங்கள் அடர்ந்த இருந்த இந்த கிராமத்திற்கு வந்தார். அப்போது ஓர் இடத்தில் விளாமரத்தின் வேரால் தடுக்கப்பட்டு அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தார். அங்கே சித்திரைத்திங்கள் வளர்பிறை திருதியையும், பூச நட்சத்திரமும், சனி வாரமும் சேர்ந்த புனித நன்னாளில் பல கோடி யுகங்களாக மறைந்திருந்த பூச ஞான வாவி என்ற ஞான தீர்த்தம் சுரந்து சனீஸ்வரரை மேல் எழுப்பி கரை சேர்த்தது. இதனால் சனீஸ்வரரின் கால் ஊனம் நிவர்த்தியாகி விட்டது. விளவேர் தடுத்து விழுந்து சுரந்த ஞான வாவி குளமாக ஏற்பட்டதால் இந்த கிராமம் விளம்குளம் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் மருவி விளங்குளம் என்ற பெயர் விளங்கி வருகிறது.
அருள்மிகு அட்சயபுரீஸ்வரர்
பூவுலகில் சிவபெருமான் மூன்று நிலைகளில் அமைந்து அருள்பாலிக்கிறார் . ஆவுடையார்கோவில் என்று வழங்கப்படும் திருப்பெருந்துறையில் அரூபமாக ஆத்மநாதராக அருள்பாலிக்கிறார் . சிவாலயங்களில் லிங்கவடிவில் அருவுருவமாகவும் அருள் பாலிக்கிறார் . தில்லையம்பதியெனும் சிதம்பரம் என்ற ஊரில் நடராஜப் பெருமானாக உருவம் கொண்டு அருள்பாலிக்கிறார். ஸ்ரீ சனீஸ்வரரின் கால் ஊனம் நீங்குவதற்காக சித்திரை மாதம் வளர்பிறை திருதியை திதியும், பூச நட்சத்திரமும் சனிக்கிழமையும் சேர்ந்த முக்கூட்டு நாளில் ஸ்ரீ சனீஸ்வரர் விளாமரத்தில் வேர் தடுக்கி பள்ளத்தில் வீழ்ந்தபோது பலயுகங்களாக மறைந்திருந்த ஞான தீர்த்தத்தை சுரக்க செய்து சாபவிமோசனம் தேடி அலைந்து வந்த சனீஸ்வரருக்கு காட்சி தந்து அவரது ஊனத்தை நீக்கி அருள் செய்தார். திருவிளாமுடைய தம்பிரானாக அருள்பாலித்து வந்த சிவபெருமான் அந்த அட்சய திருதியை நாள் முதல் அட்சயபுரிஈசனாக அட்சயபுரிஸ்வரர் என்ற திருநாமம் பெற்றுள்ளார் . தவமிருந்து துதிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது கண்கூடு.
அருள்மிகு அபிவிருத்தி நாயகி
இத்திருத்தலத்தில் உறைந்து அருள்பாலிக்கும் அம்மன் அபிவிருத்தி நாயகி என்னும் திருநாமம் கொண்டுள்ளார். அள்ளித்தரும் அட்சயபுரீஸ்வரருடன் வாழ்வில் அனைத்து விதமான பேறுகளையும் அளித்து அபிவிருத்தி செய்யும் நாயகியாக நின்ற சகல திருக்கோலத்தில் ழகிய புன்னகை முகத்துடன் தன்னை துதிப்போர்க்கு வளங்களுடன் அபிவிருத்தியாக அருள்பாலித்து வருகிறார்.
அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர்
திருக்கோயில் பிரகாரத்தில் தனி சன்னதியில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலித்து வருகிறார் . கலியுக தெய்வம் ஸ்ரீ சுப்பிரமணியர் பக்தர்களுக்கு சகல நன்மையும் தந்து அருள்பாலிக்கும் வகையில் இங்கு கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார் . வளமையாக ஸ்ரீ சுப்பிரமணியர் சன்னதிக்கு எதிர்புறம் மேற்கு முகமாக சனீஸ்வரர் உள்ளிட்ட நவக்கிரகங்கள் அமைந்திருக்கும் இங்கு அவ்வாறான அமைப்பு இல்லாதது விஷேசம் ஆகும். இத்திருக்கோயிலில் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. சூரிய தேவரையும் அவரது புத்திரர் ஸ்ரீ சனீஸ்ரர் பகவானை மட்டுமே இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது சிறப்பு அம்சமாகும் .
அருள்மிகு ஆதி பிருஹத் சனீஸ்வரர்
பல கோடி யுகங்களாக மறைந்திருந்த பூச ஞான வாவி தீர்த்தம் சுரந்ததால் கால் ஊனம் நீங்கப் பெற்ற ஆதி பிருஹத் சனீஸ்வரர். சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக காட்சி தந்து தரிசனம் கொடுத்து திருமண பிராப்த்தி வழங்கினார். மந்தா. ஜேஷ்டா என்னும் இரு பத்தினியர்களை மணம் செய்த கொண்டு மந்தா . ஜேஷ்டா சமேத ஸ்ரீ சனீஸ்வரராக திருமணக் கோலத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்தலம் இந்தியாவில் வேறு எங்கும் காணக் கிடைக்காது. பூசஞானவாவி சுரந்ததால் ஊனம் நீங்கப் பெற்ற ஸ்ரீ சனீஸ்வரரின் ஊனத்தை காகம் ஏற்றுக் கொண்டதால் மனமகிழ்ந்து காகத்தை தன் வாகனமாக ஏற்றுக்கொண்டு ஸ்ரீ ஆதி பிருஹத் சனீஸ்வரர் என்ற நாமம் பெற்றார் . சனீஸ்வரருக்கு இவ்வாறு காக வாகனம் கிடைத்ததும் இந்த ஸ்தலத்தில் தான் என்பது நிதர்சனம்.
ஒருவருடைய ஜாதகத்தில் சனி கிரகம் பாதகாதிபதியாக அமர்ந்தும் திசை, புக்தி, அந்தர காலங்களில் பாதகத்தை செய்பவராகவும், கோள்சார காலத்தில் தொடர்ந்து பாதகத்தையே அளிப்பவராகவும் அமைந்துவிட்டால் அந்த ஜாதகர்க்கு வாழ்நாள் முழுவதும் துன்பமாக அமைந்துவிடும் . பொருள் நஷ்டம் , வியாதி , எதிரிகளால் தொல்லை , கஷ்டம் . கண்டம் இவை ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்டு வாழ்வில் துயரப்பட நேரிடும் . அப்படிப்பட்டவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து ஸ்ரீ அபிவிருத்தி நாயகி சமேத ஸ்ரீ அட்சயபுரீஸ்வரரை வழிபட்டு ஸ்ரீ ஆதி பிருஹத் சனீஸ்வரர்க்கு பூஜைகள் செய்து வழிபட வேண்டும் . விபத்துக்கள், துர்மரணங்கள் ஏற்படாமலும் , எம பயம் நீங்கி நீண்ட ஆயுள் பெறவும் , எதிரிகள் செயலற்று போகவுமான மகத்தான ஆன்மீக பலன்தரும் உத்தம மூர்த்தியாக ஸ்ரீ ஆதி பிருஹத் சனீஸ்வரர் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறார் . யமதர்மனின் நாயகனான தென்திசை அசைவுகளை கவனித்தவாறு நமாமி கிரசா தேவம் இம்நோ மிருதியுங் கரிஷ்யதி என்ற மார்க்கண்டேய ஸ்தோத்திர வாக்கியப்படி அமர்ந்து அருள்புரிகின்றார்.
குறிப்பாக ஏழாம் இடத்து சனியால் தடைபட்டுள்ள திருமணம் , இரண்டாம் இடத்து சனியால் ஏற்பட்டுள்ள குடும்ப பிரிவு , ஐந்தாம் இடத்து சனியால் ஏற்படும் புத்திர தோசம் , ஒன்பதாம் இடத்து சனியால் ஏற்படும் பெரியோர் துவேஷம் மற்றும் எட்டாம் இடத்து மரணபயம். பத்தாம் இடத்தில் ஏற்படும் இடமாற்றம் , தொழில் நாசம் . லாபக் குறைவு ஆகியவை இங்கு நீறாக்கப்படுகிறது . சர்வ மங்களம் பொங்குகிறது .
திருவண்ணாமலையில் வாழும் சித்தர் பெருமான் ஒருவர் இத்தலத்தைப் பற்றி வெளியிட்டுள்ள நூலில் விளங்குளத்தில் அருள் பாலிக்கும் சனீஸ்வரர் மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி மிக்கவர் என்றும் பூவுலகின் சனீஸ்வரர் இவரே ஆதியானவர் , பெரிய சனீஸ்வரர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நீலாஞ்ஜன ஸமாபாசம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் சாயா மார்க்கண்ட சம்பூதம் தம்.நமாமி ஸ்நைச்சரம் என்று துதிப்போமாக.
பூச நட்சத்திரம்
ஸ்ரீ சனீஸ்வரரின் நட்சத்திரம் பூசம் . பூச மருங்கர் எனும் சித்தர் பிரான் சனிப்பரணி சித்திரை சத்குருவாக கொண்டவர்.
சனீஸ்வர லோகத்தில் வழிபட்டு சனீவாவி தீர்த்தத்தை எடுத்து வந்து சனீஸ்வரர் ரூபங்களிலும், திருவடிகளிலும் விரவி செல்கிறார். சனிபரணி சித்தர் சத்குருவாய் மலர்ந்திட பூச மருங்கர் சித்தரோ ப்ரபஞ்சத்தில் அனைத்து வகை பித்ரு காகங்களுக்கும் அரிய தெய்வீக சக்திகளை அளித்து அற வழிகளை புகல்கிறார். பூச மருங்க சித்தர் ஸ்தூல். சூட்சும வடிவங்களில் வழிபடும் ஸ்தலம் விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் ஆலயம். பூச நட்சத்திரத்தில் மற்றும் சனிக்கிழமைகளில் பிறந்தவர்கள் தமது வாழ்நாளில் கட்டாயம் பூஜிக்க வேண்டிய ஸ்தலம் இது.