Arulmigu Narthanapurishwarar Swamy Temple, Thalaiyalankadu - 612603, Thiruvarur District [TM014313]
×
Temple History
தல வரலாறு
தல வரலாறு
கங்கை எனும் கடும் புனலைக் கரந்தன் தன்னைக்
காமரு பூம்பொழியில் கச்சிக் கம்பன்தன்னை
அங்கையினில் மான்மறி ஒன்று எந்தினானை
ஐயாறு மேயானை ஆரூரனைப்
பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப்
பரிதிநியமத்தானைப் பாசூரானைச்
சங்கரனைத் தலையலங்காடன்தன்னைச்
சாராதே சால நாள் போக்கினேனே.
திருச்சிற்றம்பலம்
- திருநாவுக்கரசு நாயனார் தேவாரம்
தலத்தின் பெருமை
ஆலங்காடு எனப்படும் தலங்களுள் இது முதன்மையானது எனக் கருதுவர் . இதனை . முகவடாரண்யம் என்று...தல வரலாறு
கங்கை எனும் கடும் புனலைக் கரந்தன் தன்னைக்
காமரு பூம்பொழியில் கச்சிக் கம்பன்தன்னை
அங்கையினில் மான்மறி ஒன்று எந்தினானை
ஐயாறு மேயானை ஆரூரனைப்
பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப்
பரிதிநியமத்தானைப் பாசூரானைச்
சங்கரனைத் தலையலங்காடன்தன்னைச்
சாராதே சால நாள் போக்கினேனே.
திருச்சிற்றம்பலம்
- திருநாவுக்கரசு நாயனார் தேவாரம்
தலத்தின் பெருமை
ஆலங்காடு எனப்படும் தலங்களுள் இது முதன்மையானது எனக் கருதுவர் . இதனை . முகவடாரண்யம் என்று வடமொழியில் கூறுவர். தலையாலங்காடு என்ற பெயரை வைத்துப் பார்க்கும்பொழுது , இந்த பகுதி முன்ப ஆலமரக் காடுகளால் சூழப்பட்டதாக இருந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தற்போதும் கூட ஆலயத்தின் அருகில் மிகவும் பழமைவாய்ந்த ஆலமரம் ஒன்று காணப்படுகிறது .
புராண பின்புலம்
புராண வரலாறு
தமது தவ வலிமையால் அகந்தை கொண்ட தாருகாவன முனிவர்கள் ஆபிசார வேள்வி செய்து ஏவிவிட்ட முயலகனை அடக்கிய சிவபெருமான் , அம் முயலகன் மீது நடனம் ஆடிய தலம் இது . எனவேதான், சுவாமிக்கு நர்த்தனபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது .கிருத யுகத்தில் கபில முனிவர் பூஜித்து , தை அமாவாசை தினத்தில் சிந்தாமணியைப் பெற்றுக் கொண்டார் . சரஸ்வதி தேவி பூஜித்து ஜோதிர்லிங்க தரிசனம் பெற்றாள்....புராண வரலாறு
தமது தவ வலிமையால் அகந்தை கொண்ட தாருகாவன முனிவர்கள் ஆபிசார வேள்வி செய்து ஏவிவிட்ட முயலகனை அடக்கிய சிவபெருமான் , அம் முயலகன் மீது நடனம் ஆடிய தலம் இது . எனவேதான், சுவாமிக்கு நர்த்தனபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது .கிருத யுகத்தில் கபில முனிவர் பூஜித்து , தை அமாவாசை தினத்தில் சிந்தாமணியைப் பெற்றுக் கொண்டார் . சரஸ்வதி தேவி பூஜித்து ஜோதிர்லிங்க தரிசனம் பெற்றாள். இக்கலியக்கத்திலும் சங்கு தீர்த்தத்தில் நீராடுவர்கள் , குன்மம் , முயலக நோய் , சித்தபிரமை ,வெண்குஷ்டம் முதலிய மகா ரோகங்களிலிருந்து நிவர்த்தி பெறுகிறார்கள் .