Screen Reader Access     A-AA+
அருள்மிகு நெல்லிவனநாதசுவாமி திருக்கோயில், திருநெல்லிக்காவல் - 610205, தி௫வாரூர் .
Arulmigu Nellivananathaswamy Temple, Thirunellikaval - 610205, Thiruvarur District [TM014378]
×
Temple History

தல பெருமை

திருத்தலத்தின் பெயர் இக்கோயிலின் பெயர் தேவாரப் பாடலின் படி திருநெல்லிக்கா என்பது. பிற்காலத்தில் திருநெல்லிக்காவல் என வழங்குகிறது. வடமொழிப்பெயர் ஆமலகவனம் என்பது. தேவலோகத்தில் உள்ள கற்பகம் முதலிய 5 மரங்களும் இவ்விடத்தில் நெல்லி மரங்களாக அமைந்தமையால் இப்பெயர்கள் ஏற்பட்டது. மேலும் இத் தலத்திற்கு அருணநகரம், சகியாமலபுரம், பிரம்ம தீர்த்தபுரம்,குட்டரோககரம், மங்களபுரம், சர்வோத்தமபுரம்,பஞ்சதீர்த்தபுரம்,ஆனந்தபுரம்,அமிர்தானந்தபஞ்சாட்சரமூர்த்திபுரம்,பஞ்சகூடபுரம்,அமிர்தவித்யாபுரம் முதலிய பெயர்களும் வழங்கும், இவை அனைத்தும் புராணத்தில் சொல்லப்பட்டவை. சூரியன் வழிபட்டதால் அருணநகரம் என்றும் பிரம்மதீர்த்தத்தை கொண்டிருப்பதால் பிரம்ம தீர்த்தபுரம் என்றும் திவ்யரூபன் என்ற கந்தர்வனுக்குண்டான குட்ட நோய் நீங்கப்பெற்றதால் குட்டரோககரம் என்றும், திருவாரூர்,சிதம்பரம் முதலிய தலங்களுக்கு சென்று வழிபடும் பயன்கள் இத்தலத்தில் எளிதில் கிடைப்பதால் சர்வோத்தமபுரம் என்றும் இன்பம் தருவதால் ஆனந்தபுரம் என்றும், பஞ்சாட்சரமாகிய ஐந்தெழுத்துகளும் இறைவனைப் பூசிப்பதால் பஞ்சாட்சரபுரம் என்றும்...