அருள்மிகு நெல்லி வனநாதசுவாமி திருக்கோயில் மேற்கு திசை நோக்கி, ஐந்து நிலை மற்றும் ஐந்து கலசத்துடன்கூடிய இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. தேவாரத்தில் இத் திருத்தலம் திருநெல்லிக்கா என்று அழைக்கப்படுகிறது. அருணனநகரம், சாக்கியமாலபுரம், பிரம்மதீர்த்தபுரம், குஷ்டரோகரகரம், மங்களபுரம்,சர்வோத்தமபுரம், ஆனந்தபுரம், அமிர்தானந்த பஞ்சாட்சர மூர்த்திபுரம், பஞ்சகீர்த்திபுரம், மற்றும் அமிர்தவிடயபுரம் ஆகியவை இத் தலத்தின் வேறு பெயர்களாகும். இத் திருக்கோயிலின் மூலஸ்தானத்தில் அருள்மிகு நெல்லி வனநாதர் மேற்கு நோக்கியும், அருள்மிகு மங்களாம்பிகை தெற்கு நோக்கியும் அழகிய மண்டபத்தில் அருள்பாலிக்கின்றனர். மேற்கு பிரகாரத்தில் விநாயகர்,முருகன் மற்றும் சனீஸ்வரர்க்கு தனி சன்னதிகள் உள்ளன. திருக்கோயிலின் தெற்கு புறத்தில் 12 தூண்களை கொண்ட மண்டபம் உள்ளது. இத் திருக்கோயில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. ஆண்டுதோறும் தமிழ் மாதமான மாசி மாதத்தில்,மாலை...