Arulmigu Kaichineswarar Temple, Kachanam - 610201, Thiruvarur District [TM014420]
×
Temple History
தல பெருமை
சம்மந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 122ஆவது சிவத்தலமாகும். ஆனால் காவிரிக்கும் இதற்கும் வெகு தூரம்.
கவுதம முனிவர் தன் மனைவி அகலிகை மீது இந்திரன் மோகம் கொண்டான். அவளை அடைய விரும்பிய அவன் நள்ளிரவில் சேவலாக உருவெடுத்து அவரது குடில் அருகிலிருந்து கூவினான். விடிந்து விட்டதாக கருதிய கவுதமர் ஆற்றுக்கு குளிக்க கிளம்ப, அகலிகையும் வழியனுப்பி வைக்கிறார். பின்னர் இந்திரன் கவுதமரைப் போலவே உருமாறி, சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள் வந்து அகலிகையுடன் சேர்ந்து இருந்தான். இதனிடையே ஆற்றுக்கு சென்ற கவுதமர் விடியாததைக் கண்டு, ஏதோ விபரீதம் நடந்துள்ளதை ஞான திருஷ்டியால் உணர்ந்து, ஆசிரமத்துக்குத் திரும்பினார். இந்திரனின் செயலைக்கண்ட அவர் உன் உடலெங்கும் யோனியாக மாறக்கடவது...சம்மந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 122ஆவது சிவத்தலமாகும். ஆனால் காவிரிக்கும் இதற்கும் வெகு தூரம்.
கவுதம முனிவர் தன் மனைவி அகலிகை மீது இந்திரன் மோகம் கொண்டான். அவளை அடைய விரும்பிய அவன் நள்ளிரவில் சேவலாக உருவெடுத்து அவரது குடில் அருகிலிருந்து கூவினான். விடிந்து விட்டதாக கருதிய கவுதமர் ஆற்றுக்கு குளிக்க கிளம்ப, அகலிகையும் வழியனுப்பி வைக்கிறார். பின்னர் இந்திரன் கவுதமரைப் போலவே உருமாறி, சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள் வந்து அகலிகையுடன் சேர்ந்து இருந்தான். இதனிடையே ஆற்றுக்கு சென்ற கவுதமர் விடியாததைக் கண்டு, ஏதோ விபரீதம் நடந்துள்ளதை ஞான திருஷ்டியால் உணர்ந்து, ஆசிரமத்துக்குத் திரும்பினார். இந்திரனின் செயலைக்கண்ட அவர் உன் உடலெங்கும் யோனியாக மாறக்கடவது என சாபமிடுகிறார்.
அகலிகையையும் கல்லாக மாற்றினார்.
உடலெங்கும் யோனி பெற்றதால் அவமானத்தால் துன்பப்பட்டான். சாப விமோசனம் பெற வேண்டி சிவபூஜை செய்து வழிபட்டான். விமோசனம் வேண்டுமானால், மணலால் இலிங்கம் செய்து அபிஷேகம் செய்து வழிபடும்படி இறைவன் சொல்ல....
மணலில் செய்த இலிங்கத்திற்கு எப்படி அபிஷேகம் செய்ய முடியும்?
எனவே.. பிறன் மனை நோக்கிய குற்றம் செய்த இந்திரன் இன்னும் பல காலம் துன்பப்பட்டான்.
இப்படியே ஆண்டுகள் கழிந்தும் பலனின்றி, தான் அமைத்த இலிங்கத்தை கட்டிப்பிடித்து, கதறினான். அவனது விரல்கள் இலிங்கத்தில் பதிந்து லிங்கம் கல்லாக இறுகியது, அதற்கு பூஜை செய்து பாப விமோசனம் பெறுகிறான் இந்திரன்.
கைவிரல்கள் இலிங்கத்தில் பதிந்ததால், கைச்சின்ன ஈஸ்வரர் எனப்படுகிறார்.
இறைவன் - கைச்சினேஸ்வரர், கரச்சினேஸ்வரர்.
இறைவி - சுவேதவளை நாயகி, வெள்வளைநாயகி
இறைவன் ஐராவதத்தின் தந்தங்களால் செய்யப்பட்ட தந்த வளையல்களை இந்திரன் காணிக்கையாக்கியதால் வெள் வளை நாயகி என பெயர் கொண்டார். .
தலமரம் - கோங்கு இலவு (இதன் அடியில் இருந்த லிங்கம் கோங்கிலவு வனநாதேஸ்வரர் என வடகிழக்கு மண்டபத்தில் உள்ளார். . கோங்கு மரங்கள் அடர்ந்திருந்தமையால் கோங்குவனம், கர்ணிகாரவனமென்றும் பெயர்கள் உண்டு.
மதிலுக்கு வடப்புறம் இந்திரதீர்த்தமும் தென்புறம் வச்சிரத் தீர்த்தமும்
உள்ளது.
இத்தலத்தில் திருணபிந்து முனிவர் இந்திரன், அகத்தியர்
முதலியோரும் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். இந்திரன் சாபம் விலகியதும் தியாகராஜர் காட்சி தந்ததும், அகத்தியரின் பிரம்மஹத்தி விலகியதுமாகிய சிறப்புடைய தலம்.