Arulmigu Santhanaramaswamy Temple, Needamangalam - 614404, Thiruvarur District [TM014471]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு சந்தானராமசுவாமி திருக்கோயிலின் பெருமைகள் காசியாரண்யம் என்னும் ஆலங்குடி தலபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளன. தஞ்சையை ஆண்ட சிவபக்தி மிகுந்த பிரதாப சிம்ம மகாராஜா, திருவாரூரில் தியாகராஜப்பெருமானின் திருவிழாவை நடத்துவதற்காக அவ்வூரில் தங்கியிருப்பது வழக்கம். அவ்விதம் அரசர் தங்கியிருக்கும் காலத்தில் அரசரது தேவியார் யமுனாம்பாள் அம்மாள் அரண்மனையில் ஓர் இடத்தில் ராமரின் சிலை ஒன்று இருப்பதாக கனவுகண்டாள். அவ்விடத்திற்கு சென்று விக்கிரகத்தை எடுத்துவந்து வைத்து வழிபட்டு வந்தாள். பிறகு பிரதாப சிம்ம மகாராஜாவிடம் இச்செய்தியை தெரிவிக்கவே அவர் நீடாமங்கலத்துக்கு வந்து கிராமத்தை வாங்கி யமுனாம்பாள்புரம் என்று பெயரிட்டு முதலில் சத்திரத்தை கட்டுவித்தார். பிறகு பெருமாள் கோயில் திருப்பணி செய்வித்து அதில் இராமர் விக்கிரத்தை பிரதிட்டை செய்து கும்பாபிசேகம் செய்து கோவிலுக்கு வேண்டிய நிலங்களையும் தானம் செய்தார்....அருள்மிகு சந்தானராமசுவாமி திருக்கோயிலின் பெருமைகள் காசியாரண்யம் என்னும் ஆலங்குடி தலபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளன. தஞ்சையை ஆண்ட சிவபக்தி மிகுந்த பிரதாப சிம்ம மகாராஜா, திருவாரூரில் தியாகராஜப்பெருமானின் திருவிழாவை நடத்துவதற்காக அவ்வூரில் தங்கியிருப்பது வழக்கம். அவ்விதம் அரசர் தங்கியிருக்கும் காலத்தில் அரசரது தேவியார் யமுனாம்பாள் அம்மாள் அரண்மனையில் ஓர் இடத்தில் ராமரின் சிலை ஒன்று இருப்பதாக கனவுகண்டாள். அவ்விடத்திற்கு சென்று விக்கிரகத்தை எடுத்துவந்து வைத்து வழிபட்டு வந்தாள். பிறகு பிரதாப சிம்ம மகாராஜாவிடம் இச்செய்தியை தெரிவிக்கவே அவர் நீடாமங்கலத்துக்கு வந்து கிராமத்தை வாங்கி யமுனாம்பாள்புரம் என்று பெயரிட்டு முதலில் சத்திரத்தை கட்டுவித்தார். பிறகு பெருமாள் கோயில் திருப்பணி செய்வித்து அதில் இராமர் விக்கிரத்தை பிரதிட்டை செய்து கும்பாபிசேகம் செய்து கோவிலுக்கு வேண்டிய நிலங்களையும் தானம் செய்தார். சுவாமி வந்து தங்குவதற்கு சிற்பங்கள் நிறைந்த ஓர் மண்டபத்தையும் நிர்மாணித்தார். இராமரை வழிபட்டுவந்த தேவியாருக்கு சந்தானம் அருளியதால் ஸ்ரீ சந்தானராமர் என்றும், கோவிலுக்கு சந்தானராமசுவாமி கோயில் என்றும் பெயர்கள் வழங்குகின்றன.
தல பெருமை
தஞ்சை - திருவாரூர் நெடுஞ்சாலையில் நடுநாயகமாக விளங்கும் புண்ணிய ஸ்தலமான நீடாமங்கலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சீதாலெட்சுமி, ஸ்ரீ லெட்சுமணர் சமேத அருள்மிகு சந்தானராமசாமி திருக்கோயிலானது 1761 ஆம் ஆண்டு தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரான பிரதாப சிம்ம மகாராஜாவால் கட்டப்பட்டதாகும். இத்திருக்கோயில் மூன்று நிலை இராஜ கோபுரத்துடனும், திரியங்க விமான அமைப்புடனும் காட்சியளிக்கிறது.அருள்மிகு சந்தானராமசுவாமி திருக்கோயில் திருக்குளமானது பண்டைய மராட்டிய மன்னர் (1761 ஆம் ஆண்டு பிராதப சிம்ம மகாராஜா) காலத்தில் யமுனாம்பாள் குளமாக அறியப்பட்டு திருக்கோயில் வரலாற்று குறிப்பில் சாகேத தீர்த்தம் எனும் புனித ...தஞ்சை - திருவாரூர் நெடுஞ்சாலையில் நடுநாயகமாக விளங்கும் புண்ணிய ஸ்தலமான நீடாமங்கலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சீதாலெட்சுமி, ஸ்ரீ லெட்சுமணர் சமேத அருள்மிகு சந்தானராமசாமி திருக்கோயிலானது 1761 ஆம் ஆண்டு தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரான பிரதாப சிம்ம மகாராஜாவால் கட்டப்பட்டதாகும். இத்திருக்கோயில் மூன்று நிலை இராஜ கோபுரத்துடனும், திரியங்க விமான அமைப்புடனும் காட்சியளிக்கிறது.அருள்மிகு சந்தானராமசுவாமி திருக்கோயில் திருக்குளமானது பண்டைய மராட்டிய மன்னர் (1761 ஆம் ஆண்டு பிராதப சிம்ம மகாராஜா) காலத்தில் யமுனாம்பாள் குளமாக அறியப்பட்டு திருக்கோயில் வரலாற்று குறிப்பில் சாகேத தீர்த்தம் எனும் புனித தீர்த்தமாக அறியப்பட்டு பக்தர்களால் புனித குளமாக போற்றப்பட்டு வருகிறது.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரால் ஹிந்தோள வஸந்த ராகத்தில் பாடல் பெற்றதும், தஞ்சையை ஆட்சி செய்து வந்த பிரதாப சிம்ம மஹாராஜாவுக்கு புத்திர பாக்கியம் அருளியதுமான ஸ்தலமாகும். இந்த ஆலயத்தின் எதிரே உள்ள சாகேத புஷ்கரணியில் நீராடி சந்தான கோபால ஜபம் பெற்று பெருமாளை வழிபடுவோருக்கு புத்திர பாக்கியம் அருளக்கூடிய பெருமையை உடைய அற்புதமான பெருமாள் ஸ்ரீ சீதாலெஷ்மண ஹனுமந் ஸமேத ஸ்ரீசந்தானராமசுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.சீதா இலட்சுமணரோடு கோதண்ட ராமராக எழுந்தருளியுள்ளார். சந்தான ராமசுவாமி, பவ்விய ஆஞ்சநேயர் தனி சந்நிதி கொண்டுள்ளார். சந்தானராமசுவாமி திருக்கோயிலுக்கு மேற்கில்- லெட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. மூலவர் லட்சுமி நாராயணர், உற்சவர் இராஜாகோபால சுவாமி, ருக்மணி-சத்யபாமாவுடன் சேவை சாதிக்கிறார். மேலும் தெற்கில் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலும், வடக்கில் அருள்மிகு காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலும், கிழக்கில் அருள்மிகு கோகமுகேஸ்வரர் திருக்கோயிலும் அமைந்துள்ளது.இச்சிறப்புமிக்க இத்திருக்கோயிலின் சிறப்பினை கூட்டும் வகையில் கலைநயம் மற்றும் எழில்நயமும் கொண்டு, மிக்க விருத்தமான, பொலிவுடன் கூடிய திருத்தேர் உள்ளது. இத்தேரில் உள்ள சிற்பங்கள் கலைநயம் மற்றும் கலை நுணுக்கங்கள் கொண்ட வேலைபாடுகளுடனும், தத்ரூபமாகவும் செதுக்கப்பட்டு, இத்தேரினை காணும் தருணம் இராமாயண காவியத்தின் அனைத்து காட்சிகளும் நம் மனக்கண்ணில் உலாவி வரும் வண்ணம் வியத்தகு வகையில் சிற்ப வேலைபாடுகளுடனும் அமைந்துள்ளது. இத்தேரின் அரும் பெருமைகளை பறைசாற்றும் விதமாக 1761 ஆம் ஆண்டு தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப சிம்ம மஹாராஜாவால் கட்டப்பட்ட எழில் நயமும் மிடுக்கான தோற்றமும் கொண்ட தேர்முட்டி மண்டபமும் திருக்கோயிலுக்கு எதிரே சாட்சியாக நிற்கின்றது.