அருள்மிகு சந்தானராமசுவாமி திருக்கோயில் 1761ம் ஆண்டு துகோஜியின் புதல்வரான தஞ்சையை ஆண்ட பிரதாப சிம்ம மகாராஜாவால் கட்டப்பெற்றது. தஞ்சை மகாராஷ்டிர மன்னர் பிரதாப சிம்ம மகாராஜா, அவர் மனைவி யமுனாம்பாள் அம்மாள், இருவருக்கும் பலகாலம் புத்திரப்பேறு இல்லாமல் இருந்து தேவியார் ஸ்ரீ சந்தானராமனை பிராத்தித்து புதல்வன் பிறந்த காரணத்தால் ஸ்ரீ சந்தானராமசுவாமி கோயிலை காட்டினார். திருக்கோவிலில் இரண்டு பிரகாரமும், வெளியில் தேரோடும் வீதியும் உள்ளன. மூன்று கண்களை கொண்ட கோபுரவாயில் உள்ளது. கோவிலுக்கு முன்பு தெப்பக்குளம் உள்ளது. இது சாகேத தீர்த்தம் எனப்படும். இத்திருக்கோயிலின் தலசிறப்பு குழந்தைப்பேறு இல்லாதவர்கள் திருக்கோவிலின் திருக்குளத்தில் நீராடி ராமரை வழிபட்டு குழந்தைப்பேறு அடைகிறார்கள்.