Arulmigu Irawatheeswarar Temple, Thirukottaram - 609603, Thiruvarur District [TM014480]
×
Temple History
தல பெருமை
ஒரு சமயம் தேவலோக யானையும், தேவேந்திரனின் வாகனமுமான வெள்ளை நிற ஐராவத யானை மீது இந்திரன் பவனி வந்து கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த துர்வாச முனிவர் சிவலிங்க பூஜை முடித்து இறைவனுக்கு சாற்றிய தாமரை மலரை ஐராவதத்தில் வந்து கொண்டிருந்த இந்திரனிடம் கொடுத்தார். செருக்குடன் அமர்ந்து வந்த இந்திரன் பிரசாதத்தின் பெருமை அறியாமல் ஒரு கையால் தாமரை மலரைப் பெற்று அதனை தன் யானை மீது வைத்தான். ஐராவத யானையானது அம்மலரை தன் துதிக்கையால் எடுத்து தூக்கி வீசி, காலால் மிதித்து விட்டது. இதனை கண்டு ஆத்திரமுற்ற துர்வாச முனிவர் கோபம் கொண்டு தேவேந்திரனையும், ஐராவதத்தையும் சபித்தார். அதன்படி ஐராவதம் தன் பெருமையை இழந்து பூலோகத்தில் ...ஒரு சமயம் தேவலோக யானையும், தேவேந்திரனின் வாகனமுமான வெள்ளை நிற ஐராவத யானை மீது இந்திரன் பவனி வந்து கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த துர்வாச முனிவர் சிவலிங்க பூஜை முடித்து இறைவனுக்கு சாற்றிய தாமரை மலரை ஐராவதத்தில் வந்து கொண்டிருந்த இந்திரனிடம் கொடுத்தார். செருக்குடன் அமர்ந்து வந்த இந்திரன் பிரசாதத்தின் பெருமை அறியாமல் ஒரு கையால் தாமரை மலரைப் பெற்று அதனை தன் யானை மீது வைத்தான். ஐராவத யானையானது அம்மலரை தன் துதிக்கையால் எடுத்து தூக்கி வீசி, காலால் மிதித்து விட்டது. இதனை கண்டு ஆத்திரமுற்ற துர்வாச முனிவர் கோபம் கொண்டு தேவேந்திரனையும், ஐராவதத்தையும் சபித்தார். அதன்படி ஐராவதம் தன் பெருமையை இழந்து பூலோகத்தில் காட்டு யானையாவது. கருமை நிறமும் பெற்றது. நூறு தலங்கள் சுற்றி பல தலங்களில் பரமேஸ்வரனை வழிப்பட்டு, இறுதியாக மதுரையம்பதியில் இறைவன் அருளால் இழந்த பெருமையையும், வடிவத்தையும், வெண்ணிறத்தையும் பெற்று மறுபடியும் இந்திரலோகம் சென்றதாக திருவிளையாடற்புராணம் எடுத்துரைக்கிறது
ஐராவதம் காட்டானையாக இருந்து வழிபட்ட பல தலங்களில் திருக்கோட்டாறும் ஒன்று ஐராவதம் சாப விமோசனம் பெறுவதற்காக, திருக்கோட்டாற்றில் தினமும் நீராடி, துதிக்கையால் நீரும் மலர்களும் கொண்டு வந்து ஈசனை வழிபட்டு வந்தது.
ஒரு சமயம் நீண்ட நாட்கள் மழையின்றி நீர்நிலைகள் சிறிது சிறிதாய் நீர் குறைந்து இறுதியில் முழுவதும் வற்றி விட்டன. சிவபூஜை செய்வதற்கு நீரும் மலரும் இல்லாது போயின. எக்காரணத்தினாலும் சிவபூஜை தடைப்படலாகாது. என்று எண்ணிய தேவலோக யானை ஐராவதம், தன் இயற்கையான வலிமையோடு வான் நோக்கி எம்பி குதித்து தன் தந்தங்களால் அங்கிருந்த கார்மேகத்தை குத்தி கிழித்தது. மேகம் உடனே வெள்ளமென நீரை பொழிந்தது. அந்த ஆற்று நீரைக் கொண்டும், வானுலகிலிருந்து தன் துதிக்கையால் பறித்த பாரிஜாத மலரைக் கொண்டும், ஐராவதம் சிவபூஜையை சிறப்பாக செய்தது. இதை சம்பந்தர் பெருமான்,
நின்று மேய்ந்து நினைத்து மாகரி
நீரோடும் மலர் வேண்டி வான்மழை
குன்றின் ஏர்ந்து குத்திப்
பணி செய்யுங் கோட்டாற்றுள்
என்று சிறப்பாக குறிப்பிடுகின்றனர்.
திருஞானசம்பந்தர் பெருமான் கோட்டாற்றில் இருந்த எம்பெருமானை எண்ணி, இணையடி தொழுது ஏத்தும் மாந்தர்கள் வருந்தும் ஆறு அறியார் நெறி சேர்வர் வானூடே என்று பாடிப் பரவும், இந்த ஈசனை வழிபடுவோர் பாக்கியம் செய்தவர்களே ஆவர். சுபக மகரிஷி எனும் முனிவர், நாள்தோறும் இத்தலத்திற்கு வந்து ஈசனை தரிசித்து வந்தார். ஒருநாள் தாமதமாக வந்ததால் கோயில் கதவு மூடப்பட்டு விட்டது. அனுதினமும் தரிசிக்கும் வழக்கத்தை கொண்டிருந்த சுபக முனிவர், தேனீ வடிவம் கொண்டு, ஆலயத்தின் உள்ளே சென்று வழபட்டார். இது முதல் அவர் அங்கேயே தங்கி விட்டதாக நம்பிக்கை. இன்றும் சுபக மகரிஷி தேனீயாய் இருந்து ஐராவதீஸ்வரரை நித்தம் வழிபடுவதாய் ஐதீகம்.