Screen Reader Access     A-AA+
அருள்மிகு நவநீதேஸ்வரசுவாமி திருக்கோயில், சிக்கல் - 611108, நாகப்பட்டினம் .
Arulmigu Navaneetheswara Swamy Temple, Sikkal, Sikkal - 611108, Nagapattinam District [TM014571]
×
Temple History

தல வரலாறு

மல்லிகை வனம் எனும் இத்தலத்தில் வசிட்ட முனிவர் ஆசிரமம் அமைத்து நீடு தவம் செய்து தெய்வ மணங்கமழ் மல்லிகை வனத்தீசனை பணிந்து பூக்கள் கொண்டு அரன் பொன்னடி போற்றி வரலானார் . அவ்வமயம் காமதேனுப் பசு இத்தலம் சார்ந்து பாற்குளத்தில் நீராடி முன்பு செய்த தவத்தின் பயனால் மல்லிகை வனத்தீசனைப் போற்றி மாண்புறு பயனைப் பெற்றது. காமதேனு பசுவின் பால் பெருகியதால் உண்டான வெண்ணெய் நீர் நிலை பூராவும் பரவியது செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித் பொருள் என்ற சேக்கிழார் திருவாக்குப்படி கண்ணுற்றார். தவம் செய்வார் தம் கருமம் செய்வார் என்ற வள்ளுவர் வாய்மொழிக்கிணங்க அவ்வெண்ணெயை ஒன்றாக சேர்த்து சிவலிங்கமாக அமைத்து...

தல பெருமை

பூக்கள் கொண்டு அரன் பொன்னடி போற்றி வரலானார் . அவ்வமயம் காமதேனுப் பசு இத்தலம் சார்ந்து பாற்குளத்தில் நீராடி முன்பு செய்த தவத்தின் பயனால் மல்லிகை வனத்தீசனைப் போற்றி மாண்புறு பயனைப் பெற்றது. காமதேனு பசுவின் பால் பெருகியதால் உண்டான வெண்ணெய் நீர் நிலை பூராவும் பரவியது செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித் பொருள் என்ற சேக்கிழார் திருவாக்குப்படி கண்ணுற்றார். தவம் செய்வார் தம் கருமம் செய்வார் என்ற வள்ளுவர் வாய்மொழிக்கிணங்க அவ்வெண்ணெயை ஒன்றாக சேர்த்து சிவலிங்கமாக அமைத்து தன் ஆன்மார்தத பூசையை தொடங்கிச் சிவ பூசனை செய்யலுள்ளார். பூசனை இனிதே நிறைவேறியது. லிங்கத்தை வேறிடத்தில் அமைக்க முயன்றார். ...

புராண பின்புலம்

கி.பி. நான்காம் நுற்றாண்டின் முன்பிருந்த சோழ மன்னன் கோச்செங்கணான் சிவபெருமானுக்கு எழுபது கோயில்கள் கட்டி வைத்தான் என்று தெரிகிறது. அத்தகைய கோயில்களில் ஒன்றாக இலங்குவது நமது திருச்சிக்கல் ஆகும். இத்திருக்கோயில் அமைவதில் தேவ பிரதிஷ்டை, ரிஷி பிரதிஷ்டை, மானுட பிரதிஷ்டை ஆகிய அமைப்புகளில் இத்திருக்கோயில் ரிஷி பிரதிஷ்டை முறை அமைப்பில் உள்ள திருத்தலமாகும். ஞானசம்பந்த பெருமான் வெண்ணெய் பிரான் என்றே சுவாமியை அழைக்கிறார். அதேபோல் இத்திருக்கோயிலின் அம்மன் பெயரை வேல்நெடுங்கண்ணி என்று பெயரிட்டு அழைக்கிறார். மற்ற தேவார பதிகங்களில் பொதுவாக தலத்துடன் இறைவனை சேர்த்து பாடல்கள் உள்ளன. எனவே, இத்தலத்து இறைவனுக்கும் முக்கியத்துவம் அளித்து பாடல்களை பாடியுள்ளார். மேலும் இத்தலத்து முருகன் சிங்காரவேலவர்...