Arulmigu Suvarnaesthabaneswarar Temple, Sithaimur - 610203, Nagapattinam District [TM014631]
×
Temple History
தல வரலாறு
தல வரலாறு:
இவ்வூரில் செட்டித்தெருவில் சங்கரன் என்பவர் வசித்துவந்தார். இவர் ஒரு சிறந்த சிவபக்தர். இவரது மனைவி அன்பிற்பெரியாள். திருமணமாகி சிலநாட்களில் கணவன் பக்கத்து நாட்டு வியாபாரத்திற்கு சென்றுவிட்டான். கணவனுடன் வாழ்ந்த நாட்களில் அவள்கர்ப்பம் தரித்திருந்தாள். தனியாக வாழ்ந்த செட்டிப்பெண், தினமும் இக்கோயிலுக்கு சென்று கூட்டி, மெழுகி சுத்தம் செய்து வந்தாள். அத்துடன் இறைவனுக்கு பூமாலை தொடுத்துகொடுத்தாள். இவளது செயலுக்கு மகிழ்ந்த இறைவன் இவளது செலவிற்காக தினமும் ஒருபொன்காசை கோயில்வாசல் படியில் வைத்தார். இதனால் இத்தல இறைவன் பொன்வைத்த நாதர் எனப்பட்டார்.
சில மாதங்களில் இவள்கர்ப்பமாக இருப்பதுவெளி உலகிற்கு தெரிய வந்தது. சிவன் பொற்காசு கொடுப்பது யாருக்கும் தெரியாது. கணவன் ஊரில் இல்லை. இவளது செலவிற்கு பணம்ஏது?, எப்படி கர்ப்பமடைந்தாள் என ஊர்மக்கள் இவளை...தல வரலாறு:
இவ்வூரில் செட்டித்தெருவில் சங்கரன் என்பவர் வசித்துவந்தார். இவர் ஒரு சிறந்த சிவபக்தர். இவரது மனைவி அன்பிற்பெரியாள். திருமணமாகி சிலநாட்களில் கணவன் பக்கத்து நாட்டு வியாபாரத்திற்கு சென்றுவிட்டான். கணவனுடன் வாழ்ந்த நாட்களில் அவள்கர்ப்பம் தரித்திருந்தாள். தனியாக வாழ்ந்த செட்டிப்பெண், தினமும் இக்கோயிலுக்கு சென்று கூட்டி, மெழுகி சுத்தம் செய்து வந்தாள். அத்துடன் இறைவனுக்கு பூமாலை தொடுத்துகொடுத்தாள். இவளது செயலுக்கு மகிழ்ந்த இறைவன் இவளது செலவிற்காக தினமும் ஒருபொன்காசை கோயில்வாசல் படியில் வைத்தார். இதனால் இத்தல இறைவன் பொன்வைத்த நாதர் எனப்பட்டார்.
சில மாதங்களில் இவள்கர்ப்பமாக இருப்பதுவெளி உலகிற்கு தெரிய வந்தது. சிவன் பொற்காசு கொடுப்பது யாருக்கும் தெரியாது. கணவன் ஊரில் இல்லை. இவளது செலவிற்கு பணம்ஏது?, எப்படி கர்ப்பமடைந்தாள் என ஊர்மக்கள் இவளை சந்தேகப்பட்டனர். எனவே அவளை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர்.கற்புக்கரசியான இவள் மிகுந்த மன தைரியத்துடன், சிவனேதஞ்சம் என கோயிலிலேயே தங்கினாள். பிரசவ காலம் நெருங்கியது. தனக்கென யாருமேஇல்லை. தன்னை காப்பாற்றும்படி இறைவனை வேண்டினாள்.
உலக உயிர்களுக்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை அகிலாண்டேஸ்வரியே இவளுக்கு பிரசவம்பார்த்தாள். குழந்தையும் பிறந்தது. வியாபாரத்திற்கு சென்ற கணவன் ஊர்திரும்பினான். ஊர்மக்கள்அவரிடம் உன்மனைவி நடத்தையில் சந்தேகம் உள்ளது என்றனர். அதைக்கேட்ட கணவன் வருந்தினான். மனைவியிடம் விபரம் கேட்டான். அவளோ நான் உண்மையானவள் என்பதற்கு இறைவனே சாட்சி என்றாள்.
அதற்கு கணவன்,நீஉண்மையானவள் என்றால், மூடியிருக்கும் கோயில் கதவுதானேதிறக்க வேண்டும். அர்த்தஜாம பூஜைதானாக நடக்க வேண்டும்.நந்திக்கு பின்னால் இருக்கும் பலிபீடம் முன்னால் அமைய வேண்டும். கோயிலுக்கு பின்புறம் உள்ள தல விருட்சம் கோயிலுக்கு முன்னால் வளரவேண்டும்,என நிபந்தனைவிதித்தான். இதைக்கேட்ட அப்பெண்இறைவனை மன முருகி வேண்டினாள். இவளது வேண்டுதலை இறைவன் ஏற்றார். அதன்படி ஊர்மக்கள் முன்னிலையில் கதவு தானே திறந்தது. பலிபீடம் நந்திக்கு முன்னால் அமைந்தது. தலவிருட்சம் கோயிலுக்கு முன்னால் வளர்ந்தது. அர்த்தஜாம பூஜையும் அர்ச்சகர் இல்லாமல் தானே நடந்தது. இறைவனின் திருவருளால் அனைத்தும் நடந்ததை அறிந்த மக்கள், அப்பெண்ணை வாழ்த்தினர்.
நந்தி கோயிலுக்கு வெளியே இருப்பதையும் நந்திக்கு முன் பலிபீடம் இருப்பதையும் இன்றும் காணலாம்.