ஸ்தலம்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான திருக்கண்ணாபுரம் நன்கு அறியப்பட்ட இடமாகவும் 108 ஸ்ரீ வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மயிலாடுதுறை - திருவாரூர் ரயில் பாதையில் உள்ள நன்னிலம் ரயில் நிலையத்திலிருந்து பஸ் மூலம் இதை அணுகலாம். இது நன்னிலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 6 கி.மீ தூரத்திலும், கும்பகோணம் - நாகப்பட்டினம் பஸ் வழித்தடத்தில் திருப்புகலூரிலிருந்து 2 கி.மீ தூரத்திலும் உள்ளது. திருவாரூரிலிருந்து டவுன் பஸ் சேவை கிடைக்கிறது.
கிருஷ்ண க்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படும் இந்த ஸ்தலம் ஆண்டவருக்கு மேலே 3 வது இடம். இது கீழை வீடு மற்றும் பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் முதன்மையானது. ...ஸ்தலம்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான திருக்கண்ணாபுரம் நன்கு அறியப்பட்ட இடமாகவும் 108 ஸ்ரீ வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மயிலாடுதுறை - திருவாரூர் ரயில் பாதையில் உள்ள நன்னிலம் ரயில் நிலையத்திலிருந்து பஸ் மூலம் இதை அணுகலாம். இது நன்னிலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 6 கி.மீ தூரத்திலும், கும்பகோணம் - நாகப்பட்டினம் பஸ் வழித்தடத்தில் திருப்புகலூரிலிருந்து 2 கி.மீ தூரத்திலும் உள்ளது. திருவாரூரிலிருந்து டவுன் பஸ் சேவை கிடைக்கிறது.
கிருஷ்ண க்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படும் இந்த ஸ்தலம் ஆண்டவருக்கு மேலே 3 வது இடம். இது கீழை வீடு மற்றும் பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் முதன்மையானது. மற்றவை
1. திருக்கண்ணங்குடி
2. திருக்கண்ணமங்கை
3. திருகோவலூர்
4. கண்ணன் கபிஸ்தலம்
இந்த கோயில் 95 அடி உயரமுள்ள இராஜகோபுரம், நித்யபுஷ்கரணி என்ற பெரிய புனித குளத்தை எதிர்கொண்டு மையமாக அமைந்துள்ளது. குழந்தை இல்லாத தம்பதிகள் இங்கு வந்து நீராடி பெருமாளை தரிசனம் செய்தால்
குழந்தை பாக்கியம் உண்டாகும். 9 படிதுரைகளில் ஆடி அம்மவாசை மற்றும் தை அம்மவாசை நாட்களில் நித்யபுஷ்கரணியில். பலர் தங்கள் பிரார்த்தனைகளை செய்கிறாா்கள்.
பெருமாள் திருநாமம் - ஸ்ரீ செளரிராஜன் உத்ஸவர்
மூலவர் ஸ்ரீ நீலமேகப் பெருமாள்
தாயாா் திருநாமம் - ஸ்ரீ கண்ணுபுர நாயகி
புஷ்கரிணி - நித்ய புஷ்கரிணி
விமானம் - உத்பலாவதக விமானம்
இறைவன் அருளை நாடி கருடன் மற்றும் தண்டக மகரிஷி ஆகியோர் கருவறைக்குள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரதான சன்னதியின் வலதுபுறத்தில் இறைவனின் மனைவியான கண்ணபுர நாயகிக்கு ஒரு தனி ஆலயம் உள்ளது. பிரதான சன்னதியின் இடதுபுறத்தில் ஆண்டால் சன்னதியும் உள்ளது. ஆழ்வாா்கள், வீபீணாழ்வாா், கருடன் மற்றும் முனியதரையர், ராமர், சீதா, லட்சுமணர் மற்றும் அனுமன் ஆகியோருக்கு தனி சன்னாதிகள் உள்ளன. திருமங்கை ஆழ்வாா்க்கு ஒரு தனி கோயில் மேற்கு தெருவில் அமைந்துள்ளது. மனவாளமாமுனிகல் இங்கு தங்கி இந்த கோவிலைக் கட்டினார். புனித ராமானுஜருக்கான சன்னதி புஷ்கரானியின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது.
ராஜகோபுரத்தின் வலதுபுறம் 12 இராசி சக்கரத்துடன் கூடிய தேவியருடன் சூரியன் நடு நாயக மாய் நவகிரகம் சிற்பம் உள்ளது,இது இந்திரனால் வழிபடப்பட்டது என்று தொன்மம்,வைணவ ஆலயத்தில் நவகிரகம் சிற்பம் காண்பது அரிது
இலக்கிய பின்புலம்
திருமங்கை ஆழ்வார் தனது பெரியதிருமொழியில் எட்டாம் பத்தில் இத்தலத்தை 129 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்
நம்மாழ்வார் 11பாசுரங்களால் தமது பெருமாள் திருவாய்மொழியில் மங்களாசாசனம் செய்துள்ளார்
குலசேகர ஆழ்வார் 11 பாசுரங்களால் தமது பெருமாள் திருமொழியில் மங்களாசாசனம் செய்துள்ளார்,இவை பெருமாளை இராமனாக பாவித்து தாலாட்டும் வகையில் அமைந்தவை ஆகும்.
பெரியாழ்வார் 1 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்
ஆண்டாள் 1 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்,
திருக்கண்ணபுரத்தின் சிறப்புப் பிரசாதம் முனையதரன் பொங்கல். இந்த பொங்கலுக்கு தனி வரலாறு உண்டு. ஆத்மநாத தேசிகர் இயற்றிய சோழ மண்டலச் சதகம் எனும் நூலின் 42 வது பாடலில் இவ்வரலாறு கூறப்படுகின்றது. பாடல்:
புனையும் குழலாள் பரிந்தளித்த
பொங்கல் அமுதும் பொறிக்கறியும்
அனைய சவுரிராசருக்கே
ஆம் என்று அழுத்தும் ஆதரவின்
முனையதரையன் பொங்கல் என்று
...திருமங்கை ஆழ்வார் தனது பெரியதிருமொழியில் எட்டாம் பத்தில் இத்தலத்தை 129 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்
நம்மாழ்வார் 11பாசுரங்களால் தமது பெருமாள் திருவாய்மொழியில் மங்களாசாசனம் செய்துள்ளார்
குலசேகர ஆழ்வார் 11 பாசுரங்களால் தமது பெருமாள் திருமொழியில் மங்களாசாசனம் செய்துள்ளார்,இவை பெருமாளை இராமனாக பாவித்து தாலாட்டும் வகையில் அமைந்தவை ஆகும்.
பெரியாழ்வார் 1 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்
ஆண்டாள் 1 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்,
திருக்கண்ணபுரத்தின் சிறப்புப் பிரசாதம் முனையதரன் பொங்கல். இந்த பொங்கலுக்கு தனி வரலாறு உண்டு. ஆத்மநாத தேசிகர் இயற்றிய சோழ மண்டலச் சதகம் எனும் நூலின் 42 வது பாடலில் இவ்வரலாறு கூறப்படுகின்றது. பாடல்:
புனையும் குழலாள் பரிந்தளித்த
பொங்கல் அமுதும் பொறிக்கறியும்
அனைய சவுரிராசருக்கே
ஆம் என்று அழுத்தும் ஆதரவின்
முனையதரையன் பொங்கல் என்று
முகுந்தற்கு ஏறமுது கீர்த்தி
வளையும் பெருமை எப்போதும்
வழங்கும் சோழ மண்டலமே
வைணவக்குடும்பத்தில் பிறந்த காளமேகம் சைவராக மாறிவிட்டாரே என்று கண்ணபுரம் பெருமாளுக்கு கோபம் ஏற்பட்டதாம். மழைநாளில் கண்ணபுரம் பெருமாள் கோயிலில் மழைக்காக புலவர் ஒதுங்க, கோயில் கதவுகளை மூடிப் பெருமாள் உள்ளே விடவில்லை.உடனே காளமேகப்புலவர் கவிதை ஒன்று இயற்றி, பெருமாளை நோக்கிப் பாட கோயில் கதவுகள் திறந்தனவாம்.
கண்ணபுரமருவே கடவுனினும் நீயதிகம்
உன்னிலுமோ நான் அதிகம் ஒன்று கேள் - முன்னமே
உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக் கொன்றுமாம்
என் பிறப்போ எண்ணத் தொலையாது
புராண பின்புலம்
1. புராணங்களின் படி இந்திரனின் நண்பனான உபரிசிரவசு என்ற மன்னன் வானில் பறக்கும் வல்லமை பெற்றிருந்தான்,இத்திருத்தலத்தின் வழியே பறந்து செல்கையில்,இவ்விடம் தவம் செய்த முனிவர்களை சாமை அரிசி என்று எண்ணி உண்ண முயற்சித்தான்,முனிவர்கள் பெருமாளை வேண்ட ,பெருமாள் 16 வயது சிறுவனாய் தோன்றி,உபரிசிரவசு மன்னனை தோற்க்கடித்தார்,வந்தவர் விஷ்ணு என்பதை அறிந்த மன்னன் பெருமாளை தொழுது தனது மகளை இறைவனுக்கு மணமுடித்து கொடுத்தார் என்று கூறுகிறது.
2. இக்கோவில் அர்ச்சகர் ஒருநாள், கோவிலுக்கு வந்த அரசனுக்கு சுவாமிக்கு சூடிய மாலையைத் தர அதில் ஒரு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால் கோபங்கொண்ட அரசனிடம், அர்ச்சகர் அது பெருமாளின் திருமுடி என்று சொல்லிவிட, அரசன் தான் நாளை...1. புராணங்களின் படி இந்திரனின் நண்பனான உபரிசிரவசு என்ற மன்னன் வானில் பறக்கும் வல்லமை பெற்றிருந்தான்,இத்திருத்தலத்தின் வழியே பறந்து செல்கையில்,இவ்விடம் தவம் செய்த முனிவர்களை சாமை அரிசி என்று எண்ணி உண்ண முயற்சித்தான்,முனிவர்கள் பெருமாளை வேண்ட ,பெருமாள் 16 வயது சிறுவனாய் தோன்றி,உபரிசிரவசு மன்னனை தோற்க்கடித்தார்,வந்தவர் விஷ்ணு என்பதை அறிந்த மன்னன் பெருமாளை தொழுது தனது மகளை இறைவனுக்கு மணமுடித்து கொடுத்தார் என்று கூறுகிறது.
2. இக்கோவில் அர்ச்சகர் ஒருநாள், கோவிலுக்கு வந்த அரசனுக்கு சுவாமிக்கு சூடிய மாலையைத் தர அதில் ஒரு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால் கோபங்கொண்ட அரசனிடம், அர்ச்சகர் அது பெருமாளின் திருமுடி என்று சொல்லிவிட, அரசன் தான் நாளை வந்து பார்க்கும் போது பெருமாளுக்கு முடி இல்லையெனில் அர்ச்சகர் தண்டனைக்குள்ளாவார் என்று கூறிவிட்டுச் சென்றான். அர்ச்சகர் பெருமாளிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார். அவரிடம் இரக்கம்கொண்ட பெருமாள் அவரைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார். அடுத்த நாள் அரசன் வந்து பார்த்தபோது உண்மையிலேயே பெருமாள் தலையில் திருமுடி இருந்தது. இந்நிகழ்வின் காரணமாகவே உற்சவர் சௌரிராஜப்பெருமாள் எனப் பெயர் கொண்டுள்ளார் என்பது நம்பிக்கை. உற்சவர் உலாவில் அமாவாசையன்று மட்டும் திருமுடி தரிசனம் காணலாம்.
திருக்கண்ணபுரத்தில் வாழ்ந்து வந்த முனையதரையர் எனும் பக்தர் பெருமாள் திருப்பணிகளைச் செய்து வந்த போது, பஞ்சம் ஏற்பட்டது. அவரோ பெருமாளுக்குப் படைக்காமல் எதுவும் உண்ணாதவர். எனவே வீட்டில் இருக்கும் பொங்கலை அவரது மனைவியார் இறைவனுக்கு மானசீகமாகப் படைத்து வழிபட, திருக்கோயிலைத் திறக்கும் போது பொங்கல் மணம் வீசுவதையும் பொங்கல் முனையதரையர் வீடு வரையும் சிதறி இருப்பதையும் கண்டு அடியார் வீட்டில் படைத்த எளிய பொங்கலை பெருமாள் ஏற்றுக்கொண்டதை அனைவரும் அறிந்தனர்.
இதை நினைவுகூரும் விதமாக இன்றளவும் அர்த்த சாமத்தில் பெருமாளுக்கு பொங்கல் வழங்கப்படுகின்றது.
4. விபீஷ்ணாழ்வாா் விரும்பியபடி, ஸ்ரீராமர் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்தார். ஸ்ரீரங்கத்தில் சயன தோரணையில் சாய்வதில் விபீஷ்ணாழ்வாா் இறைவனின் அழகை ரசித்தபோது, அவர் தனது நடைஅழகைக் காட்டி அவரை ஆசீர்வதிக்குமாறு இறைவனிடம் வேண்டினார். இறைவன் அவனுடைய கிழக்கு வாசஸ்தலத்தில் கீழை வீடான - திருக்கண்ணாபுரத்தில் அவ்வாறு செய்வதாக உறுதியளித்தார். அதன்படி அவர் ஒவ்வொரு மாதம் அம்மாவாசை மதியம் திருக்கைதல சேவை என்றும் இந்த சன்னதியில் . தலையில் சவ்ரிமுடியுடன் விபீஷ்ணர் சன்னதியை நோக்கி நடை அழகு காட்டி அருளுகிறார்.
5.
கா்வம் அழிந்த கருடன்- தன் தாயை விடுவிப்பதற்காக பாற்கடலில் அமிா்தம் பெற்று திரும்பிக் கொண்டிருந்தாா்கருடன். வழியில் யாருக்கும் கிடைக்காத அமிா்தத்தை தான் கொண்டு வருவதை எண்ணி அவா் மணம் கா்வம் கொண்டது. கா்வத்துடன் அவா் இல்லாத்திற்கு மேலே சென்றதால் தன் சக்தி இழந்து கடலில் விழுந்தாா். தவரை உணா்ந்த கருடன் கடலில் இருந்த மலையின் மீது தவம் புரிந்தாா். விஷ்ணு அவரை மண்னித்து தன் வாகனமாக ஏற்றுக்கொண்டாா். மாசி பவுா்ணமியில் கடற்கரையில் கருடனுக்கு காட்சி தருகிறாா்.இவ்விழாவின் போது சுவாமியை மாப்பிள்ளை என்று கோஷமிட்டு வித்தியாசமாக வரவேற்கின்றனா்.