நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் பிரசித்திபெற்ற சவுரிராஜப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற வைணவ திருத்தலங்கள் திவ்யதேசம் என்று அழைக்கப்படுகிறது. அவை 108 வைணவ திருப்பதிகள் ஆகும். சோழ நாட்டில் 40 திவ்ய தேசங்கள் உள்ளன. 129 பாடல்களால் போற்றப்படும் பெருமை திருக்கண்ண புரத்துக்கே உண்டு. ஸ்ரீரங்கம், திருப்பதி ஆகியவற்றுக்கு அடுத்தப்படியாக அதிகம் மங்களாசாசனம் செய்ய பட்ட திவ்யதேசம் . இந்த வைணவ தலத்தில் நவக்கிரகங்கள் மேல் எம்பெருமான் பார்வைப்படுவதால் வழிபடுவோரின் சகல கிரக தோஷங்களும் நிவர்த்தியாவது சிறப்பம்சமாகும். இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும்