Screen Reader Access     A-AA+
அருள்மிகு நடுதறிநாதர் சுவாமி திருக்கோயில்,, கோவில்கண்ணாப்பூர் - 610207, நாகப்பட்டினம் .
Arulmigu Nadutharinathar Temple, Kovil Kannappur, Kovilkannapur - 610207, Nagapattinam District [TM014689]
×
Temple History

தல வரலாறு

தல வரலாறு: (கன்று- பசுங்கன்று. ஆப்பு- அக்கன்றைக்கட்டும் சிறுமுளை, நடுதறி- நடப்பட்ட தறி. தறி- முளை) ஒருகாலத்தில் சிவபெருமான் உமாதேவியாருடன் கயிலாய மலையில் வீற்றிருந்தார். படைத்தல் முதலிய தொழில்கள் பிரமதேவனை முதலாகக் கொண்ட தேவர்களால் நடத்தப்பெற்றன. அப்பொழுது இறைவன் முன்பு சுதாவல்லி என்னம் வித்யாதரப்பெண் உமை உருவம் தாங்கி நடித்து இறைவனுக்கு மகிழ்ச்சி உண்டாக்கினாள். இதைக் கண்ட உமாதேவியார் சுதாவல்லியை நோக்கி தன்னுருக்கொண்ட அவளிடத்தில் சினங்கொண்டு, நீமண்ணுலகத்தில் பிறக்க எனச்சபித்தார். பின்நிகழ்ச்சிஅறியாதுநடித்தசுதாவல்லிகண்கலங்கினாள். என்ன செய்வேன்என பதறினாள். அப்பொழுது இறைவி, நீமண்ணுலகம் அடைந்து சிவனை பூஜித்து எம்மை அடைவாய் எனக்கூறி அருள்பாலித்தாள். அப்படியே சுதாவல்லி தென்தமிழ்நாட்டை அடைந்து, தேவூருக்குத் தென்பால் திகழ்கின்ற இத்திருத்தலத்தில் பரம்பரை சைவ வேளாளர் மரபில் சிவஞானம் நிரம்பப்பெற்று பிறந்து கமலவல்லி...