Screen Reader Access     A-AA+
அருள்மிகு கலிதீர்த்த அய்யனார் திருக்கோயில், ஆயக்காரன்புலம் - 3 - 614707, நாகப்பட்டினம் .
Arulmigu Kalidheertha Ayyanar Temple, Ayakkaranpulam 3rd Sethi, Ayakkaranpulam-3 - 614707, Nagapattinam District [TM014715]
×
Temple History

தல பெருமை

அடர்ந்த கோடியக்காட்டின் தொடர்ச்சி பகுதிகளும் உப்புநீர் (கடல்நீர்) சூழ்ந்த நிலையில் ஆயக்காரன்புலத்தில் மட்டும் நல்ல நீர் இருந்தது. அதனால் அந்த இடத்தில் அந்தணர்கள் வேதம் ஓதி நீர் எடுத்துச்சென்று வேதாரண்யேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வந்தனர். அந்த ஓடை வேதகிரி ஓடை என்ற பெயரோடு இன்றும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த காட்டில் அமாவாசை நாளன்று மட்டும் பெரிய ஒளி வடிவம் ஒன்று காட்டுக்கு மேலே தோன்றி கட்டுக்குள் வந்து சென்றது இதை அந்தநர்கள் பார்த்து வந்தார்கள். அந்த ஒளி வடிவத்தில் இளவரசனைப்போல் உருவம் ஒன்று தெரிவதும் மறைவதுமாக இருந்தது.இதை பார்த்த அந்தணர்கள் வேத மந்திரம் ஓதி அம்மாவாசை அன்று காட்டில் பூஜை செய்து, அந்த ஒளி மேலே செல்லாமல் இருக்க காவும் கொடுத்தனர்.அன்று அந்த ஒளி...