இத்திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், ஆயக்காரன்புலம் 3 கிராமத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் அருள்மிகு கலிதீர்த்த அய்யனார் மூலவராக அமைந்து அருள்பாலிக்கிறார். சுவாமி இங்கு சுயம்புவாக அமைந்துள்ளார். மேலும் இத்தலத்தில் அருள்மிகு தூண்டில் கருப்பசுவாமியும், அருள்மிகு மகா வீரப்பசுவாமியும் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.