அருள்மிகு திருவெட்டீஸ்வரன் திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை - 600005, சென்னை .
Arulmigu Thiruvattewarar Temple, Triplicane, Chennai - 600005, Chennai District [TM000150]
×
Temple History
தல வரலாறு
மிகப்பழமையான இத்திருக்கோயில் 7-ம் நூற்றாண்டில் இருந்துள்ளது. இயற்கை அல்லது போரின் காரணமாக இக்கோயில் முற்றிலும் அழிந்து மூலவர் சிவலிங்கம் மட்டும் செண்பக மரங்கள் அடங்கிய புதரில் மறைந்து இருந்தது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் பசு ஒன்று தினமும் சிவலிங்கத்தின் மீது பால் சுரப்பதைக் கண்ணுற்று மக்கள் சுயம்பு லிங்கமாக இருந்த லிங்கத்தின் மீது வெட்டுகாயம் இருந்ததால் திருவேட்டீஸ்வரர் என அழைத்து திருக்கோயில் எழுப்பினர்.மொகாலய பேரரசர் காலத்தில் மான்பங்கள் இத்திருக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியர் ஆட்சிக் காலத்தில் 1.11.1734-ல் இக்கோயில் நிலங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து கவுல் ஏற்பட்டது. எனவே 16,17-ம் நூற்றாண்டில் இக்கோயில் இருந்துள்ளது எனவும் நவாப் மான்யங்கள் தரப்பட்டதாக ...மிகப்பழமையான இத்திருக்கோயில் 7-ம் நூற்றாண்டில் இருந்துள்ளது. இயற்கை அல்லது போரின் காரணமாக இக்கோயில் முற்றிலும் அழிந்து மூலவர் சிவலிங்கம் மட்டும் செண்பக மரங்கள் அடங்கிய புதரில் மறைந்து இருந்தது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் பசு ஒன்று தினமும் சிவலிங்கத்தின் மீது பால் சுரப்பதைக் கண்ணுற்று மக்கள் சுயம்பு லிங்கமாக இருந்த லிங்கத்தின் மீது வெட்டுகாயம் இருந்ததால் திருவேட்டீஸ்வரர் என அழைத்து திருக்கோயில் எழுப்பினர்.மொகாலய பேரரசர் காலத்தில் மான்பங்கள் இத்திருக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியர் ஆட்சிக் காலத்தில் 1.11.1734-ல் இக்கோயில் நிலங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து கவுல் ஏற்பட்டது. எனவே 16,17-ம் நூற்றாண்டில் இக்கோயில் இருந்துள்ளது எனவும் நவாப் மான்யங்கள் தரப்பட்டதாக வரலாற்றுச் செய்திகளால் அறிகிறோம். இன்றும் அர்த்தசாமப் பூஜைக்குப் பால், புஷ்பம் போன்றவற்றை நவாப் பரம்பரையினர் இறைவனுக்கு சமர்ப்பிக்கின்றனர்.