Screen Reader Access     A-AA+
அருள்மிகு சாட்சி பூதேஸ்வரர் திருக்கோயில், பழையனூர் - 631210, திருவள்ளூர் .
Arulmigu Satchi Pootheswarar Temple, Pazhiyanoor - 631210, Tiruvallur District [TM001519]
×
Temple History

தல பெருமை

காஞ்சிபுரத்தில் புவபைதி என்ற அந்தனர் ஒருவர் இருந்தார். திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து காசிக்குச் சென்றார். கங்கைநீரைக்கொண்டு விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து வந்தார். காசி நகரில் சத்யஞானி என்ற அந்தனர் சிவக்கியானி என்ற மகனுடனும் நவக்கியானி என்ற மகளுடனும் வாழ்ந்து வந்தார். புவபைதியை தன் வீட்டில் விருந்தினராக சிலகாலம் தங்கவைத்து பிறகு தன் மகள் நலக்கியானியைத் திருமணம் செய்து வைத்தார். சிலகாலம் இல்லறம் நடத்திய பின்பு காஞ்சிபுரம் செல்ல புறப்பட்டான். எவ்வளவோ மறுத்தும் நவக்கியானியும், சிவக்கியானியும் உடன் வந்தனர். இரண்டாம் திருமணம் செய்து கொண்ட விஷயம் முதல் மனைவிக்குத் தெரிந்தால் விபரீதமாகிவிடும். எனவே, நவக்கியானியைக் கொன்று விட வேண்டும் என எண்ணினார்...