அருள்மிகு லட்சுமிநாராயண பெருமாள் திருக்கோயில், வங்கனூர் - 631303, திருவள்ளூர் .
Arulmigu Lakshminarayana Perumal Temple, Vanganoor - 631303, Tiruvallur District [TM001531]
×
Temple History
தல பெருமை
1. திருத்தணியிலிருந்து சித்தூர், சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையில் 22 கி. மீ. தொலைவில், இரண்டு கிலோ மீட்டர் வடக்கே அமைந்துள்ளது வங்கனூர் என்ற மிகப் புராதனத் திருத்தலம். இங்கு அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில், 1100 ஆண்டுகள் புராதனமானது.
2. இத்திருக்கோயிலில், ஸ்ரீ மகாலட்சுமியுடன் சேர்ந்து ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமான் கோயில் கொண்டெழுந்து அருள்பாலிக்கிறார். தாயாரின் திருநாமம் ஸ்ரீ கனகவல்லி என்பதாகும். இவர்கள் தவிர, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ஆதிநாராயண சுவாமி, ஸ்ரீசக்ரதாழ்வார், ஸ்ரீயோக ஆஞ்சிநேய சுவாமி, அஷ்ட லட்சுமி சன்னதிகள் ஆகியன உள்ளன.
3. இக்கோயில் அமைந்திருக்கும் பகுதி, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர் ஆட்சிக் காலத்தில் ரண...1. திருத்தணியிலிருந்து சித்தூர், சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையில் 22 கி. மீ. தொலைவில், இரண்டு கிலோ மீட்டர் வடக்கே அமைந்துள்ளது வங்கனூர் என்ற மிகப் புராதனத் திருத்தலம். இங்கு அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில், 1100 ஆண்டுகள் புராதனமானது.
2. இத்திருக்கோயிலில், ஸ்ரீ மகாலட்சுமியுடன் சேர்ந்து ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமான் கோயில் கொண்டெழுந்து அருள்பாலிக்கிறார். தாயாரின் திருநாமம் ஸ்ரீ கனகவல்லி என்பதாகும். இவர்கள் தவிர, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ஆதிநாராயண சுவாமி, ஸ்ரீசக்ரதாழ்வார், ஸ்ரீயோக ஆஞ்சிநேய சுவாமி, அஷ்ட லட்சுமி சன்னதிகள் ஆகியன உள்ளன.
3. இக்கோயில் அமைந்திருக்கும் பகுதி, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர் ஆட்சிக் காலத்தில் ரண ரசிகன் இரண்டாம் விக்கிரமாதித்யன் என்ற சாளுக்கிய மன்னனின் ஆளுகையின் கீழ் இருந்தது. அம்மன்னனின் பிரதிநிதிகள் இப்பகுதியைச் சில காலம் ஆட்சி செய்தனர். அவர்களுள் ஸ்ரீ நரேந்திரன் என்ற மன்னர் தெற்கே கடிகாசலம் சமஸ்கிருத பள்ளி அமைந்த சோழலிங்கபுரம், வடக்கே விருஷாபாத்ரி எருதுமலை மேற்கே சஷிராத்ரி பாலமலை கிழக்கே தாசஷாயநதி நந்தி ஆறு என்ற எல்லைகளுக்கு நடுவே வங்கனூரில் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமானுக்கு ஓர் அழகிய திருக்கோயிலை நிர்மாணித்தார். பின்னர் அந்த மன்னர் பெயராலே ஸ்ரீ நரேந்திர ராஜ வைகுண்ட நகரம் என்ற பெயர் ஏற்பட்டது.
4. இத்தலத்தில் தான் வியாசர் மகரிஷிக்கு எம்பெருமான் ஸ்ரீலட்சுமி நாராயணப்பெருமான் திருக்கோலத்தில் தரிசனம் தந்தருளினார் என்பது ஐதீகம்.
5. மேற்படி திருத்தலம் மானுஷ சேஷத்ரம் எனவும் வழங்கப்பட்டது. அதாவது மனிதர்களால் மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்டது என்பது பொருள். பின்னர் இத்தலத்தைச் சாருக்கிய மன்னர்களிடமிருந்து சந்திரகுலத்து சிற்றரசர்கள் கைப்பற்றினர். இவர்கள் தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். இவர்கள் கார்வேட்டி என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார்கள். அவர்கள் தான் ஸ்ரீலட்சுமி நாராயண பெருமான் கோயிலுக்கு பிரதான மண்டபமும் கட்டி கோயிலுக்கு குடமுழுக்கையும் செய்தார்கள்.
6. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு இத்தல மக்களாலும், கார்வேட்டி நகர குறுநில மன்னரான ஸ்ரீவேங்கட நரசிம்ம குமாரராஜா என்பவரால் ஜீர்ணோர்தாரணம் செய்து கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டது. வெகுகாலம் வரை இவரது வம்சத்தினரரால் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன.