திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், வங்கனூர் கிராமத்தில் அருள்மிகு இலட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. கி. பி. 1100-ஆம் ஆண்டு பல்லவர் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது. இத்திருக்கோயில் கடிகாசலஷேத்திரம் போன்றே இங்கே (சின்னமலையில் உள்ளவாறு) ஸ்ரீ யோக ஆஞ்சநேயசுவாமி 4 திருக்கரங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி அருள்புரிகிறார்.
| 07:00 AM IST - 11:00 AM IST | |
| 04:00 PM IST - 08:00 PM IST | |
| 08:00 PM IST - 07:00 AM IST | |
| இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 7.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நண்பகல் 11.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு,மீண்டும் மாலை 4.00 மணிக்கு வழிபாடு தொடங்கி இரவு 8.00 மணிக்கு நடை சாத்தப்படும்.(விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது) | |