ஸ்ரீசொர்ணவள்ளி அம்பாள் உடனுறை திருநாகேஸ்வரர் கோயில், வளர்புரம் - 631003, ராணிப்பேட்டை .
Arulmigu Thirunageshwarar Temple, Valarpuram - 631003, Ranipet District [TM001533]
×
Temple History
தல பெருமை
இந்த புனிதமான க்ஷேத்திரம் பல நூற்றாண்டுகளாகக் காணப்பெறாது மலையளவாக விரிந்து உயர்ந்த கள்ளிக்காடுகளாலும், கொடிய விஷமுட்களாளும் மறைந்திருந்த சிவலிங்கப் பெருமாள் நம்மை வெளிப்படக் கண்டு வழிபாடு செய்துய்க என்று 1917-ஆம் ஆண்டு க்ஷேத்திரத்திலேயே வாழ்ந்த மத்தால சுப்பிரமணி சாஸ்திரிகள் நெற்களத்தில் படுத்திருந்த சமயம் சிவபெருமான் பிராமணர் வேடத்தில் வந்து அவரை தட்டி எழுப்பி நம்மை வழிபாடு செய்துள்ன என்று கூறினார். அவர் அதை பொருட்படுத்தாத நிலையில் மீண்டும் இருபது நாள் கழித்து அதே நெற்களத்தில் நெற்கட்டுகளுக்கு காவல் படுத்திருக்கும் பொழுது இரண்டாவது முறையாக சிவபெருமான் அதே பிராமணர் வேடத்தில் வந்து வெள்ளி பிரம்பினால் தட்டி எழுப்பி, நான் சொல்லியது பொருட்படுத்தவில்லையே ஏன்? என்று கூறி, தான் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று...இந்த புனிதமான க்ஷேத்திரம் பல நூற்றாண்டுகளாகக் காணப்பெறாது மலையளவாக விரிந்து உயர்ந்த கள்ளிக்காடுகளாலும், கொடிய விஷமுட்களாளும் மறைந்திருந்த சிவலிங்கப் பெருமாள் நம்மை வெளிப்படக் கண்டு வழிபாடு செய்துய்க என்று 1917-ஆம் ஆண்டு க்ஷேத்திரத்திலேயே வாழ்ந்த மத்தால சுப்பிரமணி சாஸ்திரிகள் நெற்களத்தில் படுத்திருந்த சமயம் சிவபெருமான் பிராமணர் வேடத்தில் வந்து அவரை தட்டி எழுப்பி நம்மை வழிபாடு செய்துள்ன என்று கூறினார். அவர் அதை பொருட்படுத்தாத நிலையில் மீண்டும் இருபது நாள் கழித்து அதே நெற்களத்தில் நெற்கட்டுகளுக்கு காவல் படுத்திருக்கும் பொழுது இரண்டாவது முறையாக சிவபெருமான் அதே பிராமணர் வேடத்தில் வந்து வெள்ளி பிரம்பினால் தட்டி எழுப்பி, நான் சொல்லியது பொருட்படுத்தவில்லையே ஏன்? என்று கூறி, தான் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று சுயம்பு ரூப லிங்க வடிவ சிவபெருமானை காட்டி மறைந்தார். அவர் பிரமித்துபோய் வீடு திரும்பினார். மறுநாள் கிராமத்தில் சிவ அன்பர்களை கலந்து ஆலோசித்து அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது இரவு தனக்கு தரிசனம் காட்டிய சிவலிங்கப் பெருமான் காணப்பெறாமல் ஊரில் உள்ள பல அன்பர்கள் பொருள் உதவியால் விழ முட்டுகாடுகள் வெட்டி வரும்போது சிவலிங்க பெருமானாகிய சுவாமியை வெளிக்கண்டனர். பின்பு திருப்பணி செய்து கொண்டிருந்த தேவக்கோட்டை லெ. அரு. இராமநாத செட்டியார், இராம அரு. அரு. இராம. அருணாசல செட்டியார் போன்றவர்களை சுப்பிரமணி சாஸ்திரியார் அழைத்து வந்து காட்டி, சுவாமி கனவில் வந்து இருக்கும் இடத்தை காண்பித்ததை சொல்லி திருப்பணிக்கு உதவும்படி அவர்களிடம் கேட்டுக் கொண்டார். அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளை காண்பித்து அதில் பொறித்திருந்த சுவாமி, அம்பாள் பெயரை திருநாகேஸ்வரர், சொர்ணவள்ளி அம்பாள் என்ற பெயர்களை பார்த்தபின் செட்டியார் திருத்தணி சென்று நாட்டுக்கோட்டை சத்திரத்தின் அருகில் அமைந்துள்ள திருகுளத்தில் காலை ஸ்நானம் செய்யும் பொழுது மேற்படி சாஸ்திரியார் செட்டியாருக்கு துணி துவைத்து கொடக்க ஆச்சர்யம் அடைந்தார்.
அன்று மாலை ஊர் அன்பர்களடன் திருத்தணியில் செட்டியாரை காண சாஸ்திரிகளை பார்த்து குளத்தில் துணி துவைத்து கொடுத்தாயே நீ எங்கு சென்றாய் என்று கேட்டு சாஸ்திரியார் உங்களை காலை வழி அனுப்பிவிட்டு நான் இப்பொழுதுதான் வருகிறேன் என கூறி சாஸ்திரியுடன் வந்த ஊர் அன்பர்கள் உண்மையை விளக்க செட்டியார் அதிர்ந்து போய் கண்ணீர்மல்க இறைவா என்னை சோதிக்கிறாயா நீயா எனக்கு துணி துவைத்து கொடுத்தது என்று பிரமித்தார்.
உடனே சாஸ்திரிகளை செட்டிநாட்டுக்கு வரச்சொல்லி பொருளுதவி செய்து திருப்பணி நடந்து வரும் காலத்தில் மேல்தளம் மரக்கொம்புகளால் வேய ஏற்பாடு செய்துக்கொண்டு வருகையில் திருப்பணி வசூலுக்காக சென்று சாஸ்திரியார் படுத்திருக்க கனவில் சுமங்கலி ரூபத்தில் அம்பாள் தோன்றி சுமார் 1000 வருடங்களக்கு முன் கருங்கற்களால் கட்டப்பெற்ற ஆலயம் கிளமடைந்து விட்டதே நீ மரக்கொம்புகளால் தளம் போடுவது ஏன்? என்று கூற சாஸ்திரியார் பொருள் கிடைப்பதும், கற்கள் கிடைப்பதும் அரிதாக உள்ளது என்று கூற நான் குறிப்பிட்ட உடன், ஒரு இடத்தில் குறி போடுகிறேன் அங்கு சென்றால் கற்கள் வேண்டியது கிடைக்கும், பொருளைப்பற்றி உனக்கேன் கவலை என்று அம்பாள் அறைந்தார்.
சாஸ்திரிகள் ஊர் வந்து (வளைகுளம்) அந்த ஊரில் உள்ள ஏரியில் குறிபோட்டு காட்டிய இடத்தை போய் பார்க்க கனவில் காட்டிய குறி அவ்விடத்தில் காணப்பட்டது. அங்கிருந்த மண்ணை அகற்றியதில் அங்கு பெரிய கருங்கல் பாறை காணப்பெற்று அதில் கிடைத்த கருங்கள் உதவியால் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் 100 சதுரம் கொண்ட கோயில் 1917-ல் ஆரம்பித்து 1930-ம் ஆண்டு கட்டி முடித்து 1930-ம் ஆண்டு மே மாதம் 4-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தி முடித்தார்.