வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், வளர்புரம் கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் அரக்கோணத்திலிருந்து 12 கிலோ மீட்டம் தொலைவில் அமைந்துள்ளது. மேற்படி ஆலயம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் சோழ அரசர்களால் கட்டப்பட்டது. பழமையான சிவப்பதிகளுடன் மூன்று குளப்பதிகள் சிறந்திருந்தன என்பது திருஞான சம்பந்தரின் வளைகுளமும் தனிக்குளமும் நல்இடைக்குளமும் என்ற பாட்டில் தெரிய வருகிறது. சுவாமி சுயம்பு மூர்த்தி, சம்பந்தர், திருநாவுக்கரசர், சேக்கிழார், ஐயடிகள், காடவர், கோன் நாயனார் ஆகியோர்களால் பாடப்பெற்றது.