அருள்மிகு பணாமுடீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் - 631501, காஞ்சிபுரம் .
Arulmigu Panamudeshwarar Temple, Kancheepuram - 631501, Kancheepuram District [TM001670]
×
Temple History
தல வரலாறு
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தெற்கே கீரை மண்டபம் என்ற பகுதியில் அருள்மிகு பணாமுடீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் கோபுரம், மூலவர் சன்னதி, விநாயகர், முருகர் சன்னதி ஆகியவை கிழக்கு பார்த்தவண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
சூரியனார், வைரவர், சித்தீஸ்வரர், பெருமாள் மற்றும் நவகிரகங்கள் அருள் பாலிக்கின்றனர். இத்திருக்கோயிலின் மூலவர் சன்னதியில் பணாமுடீஸ்வரர் காட்சி தருகின்றார். ஒரு சமயம் கருடன் வலுபெற்று பாம்புகளை துன்புறுத்தி வந்தாராம். இதனால் வருத்தமற்ற பாம்புகளும் இந்த பகுதியில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டு வந்துள்ளன.
தங்களுக்கு கருடனால் அச்சுறுத்தல்கள் ஏற்படுகின்றன என்றும், தங்களை காக்க வேண்டும் என வருத்தப்பட்டு சிவலிங்கத்தை பூஜை செய்தும் வந்துள்ளன. நாகங்களின் பூஜையால் மனம் உருகிய ஈசனோ...காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தெற்கே கீரை மண்டபம் என்ற பகுதியில் அருள்மிகு பணாமுடீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் கோபுரம், மூலவர் சன்னதி, விநாயகர், முருகர் சன்னதி ஆகியவை கிழக்கு பார்த்தவண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
சூரியனார், வைரவர், சித்தீஸ்வரர், பெருமாள் மற்றும் நவகிரகங்கள் அருள் பாலிக்கின்றனர். இத்திருக்கோயிலின் மூலவர் சன்னதியில் பணாமுடீஸ்வரர் காட்சி தருகின்றார். ஒரு சமயம் கருடன் வலுபெற்று பாம்புகளை துன்புறுத்தி வந்தாராம். இதனால் வருத்தமற்ற பாம்புகளும் இந்த பகுதியில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டு வந்துள்ளன.
தங்களுக்கு கருடனால் அச்சுறுத்தல்கள் ஏற்படுகின்றன என்றும், தங்களை காக்க வேண்டும் என வருத்தப்பட்டு சிவலிங்கத்தை பூஜை செய்தும் வந்துள்ளன. நாகங்களின் பூஜையால் மனம் உருகிய ஈசனோ நாகங்களை எடுத்து தன் உடல் மீது அணிகலன்களாக அணிந்து கொண்டாராம்.
அதாவது பணவை அணிந்து கொண்டதால் பணாமுடீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இங்கு ராகு பகவான் கேது பகவான் என்ற இரு நாகங்களை ஈஸ்வரனை வழிபட்டு வந்தமையால் இந்த தலத்தில் ராகு கேது பரிகார தலம் என்றும் அழைக்கின்றன.
ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்றும் இத்தலம் காளகஸ்தி கோயிலுக்கு நிகரானது என்றும் கூறப்படுகின்றது. ஒரு முறை குபேரன் இவ்விடம் வந்து சுவாமியை மகிழ்விக்க பல இன்னிசை பாடல்கள் மற்றும் மேள தாளங்கள் ஆகியவற்றை இசைத்து வரங்கள் பெற்றதாக வரலா கூறுகின்றன.
இக்கோயிலின் சுவர்களிலும் சுவற்றை சுற்றிலும் குபேரன் இக்கோயிலில் வாத்தியங்களை இசைப்பது போல சித்திரங்களும் பொரிக்கப்பட்டுள்ளன. இதேபோல் கோயில் கோபுரத்தின் மேலே நாகங்கள் ஒன்றாக இணைந்தபடி கோபுரத்தை தாங்குவது போலவும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
இந்த திருக்கோயிலுக்கு வருகை புரிந்து சுவாமியை வழிபட்டால் கொடிய நாகங்களின் விஷம் அகலும் என்றும் கூறப்படுகின்றது. ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் மகா சிவராத்திரி அன்றும் இக்கோயிலில் விசேஷ பூஜைகள் செய்யப்படுகின்றன. மேலும் இக்கோயிலில் முருகன் சன்னதியில் கந்த சஷ்டி திருவிழா 7 நாட்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குபேரன் இக்கோயிலில் வாத்தியங்களை இசைப்பது போல சித்திரங்கள் பொரிக்கப்பட்டுள்ளன.