அருள்மிகு விகடசக்ர விநாயகர் திருக்கோயில், காஞ்சிபுரம் - 631501, காஞ்சிபுரம் .
Arulmigu Vigada Chakra Vinayagar Temple, Kancheepuram - 631501, Kancheepuram District [TM001674]
×
Temple History
தல பெருமை
காஞ்சிபுரம் மாவட்டம் , வட்டம் மற்றும் நகர், ஆலடி பிள்ளையார் கோயில் தெருவில் அருள்மிகு விகடசக்கர விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.
திருமால் சிவபெருமானை ஆயிரம் மலர்களால் அர்ச்சித்து வழிபட்ட போது ஒரு பூ குறைந்ததால், தனது ஒரு கண்ணை மலராகக் கருதி எடுத்து அருச்சித்தார். இந்த செயற்கரிய செயலுக்காக சிவபெருமான் சக்கரத்தை பரிசாக தந்தார். அச்சக்கரம் சலந்தரா சூரனை கொன்றதால் இரத்த கறையுடன் முடைநாற்றம் வீசும் நிலையில் காணப்பட்டது. இதனால் சக்கரத்தை கொடுத்த சிவபெருமானுக்கும் அதனை பெற்ற திருமாலுக்கும் பழி நேர்ந்தது.
இவ்விருவரின் குறைகளையும் பழியையும் நீக்கிட அச்சக்கரத்தை வாங்கி பார்த்த விநாயகர் அதனை திருப்பி...காஞ்சிபுரம் மாவட்டம் , வட்டம் மற்றும் நகர், ஆலடி பிள்ளையார் கோயில் தெருவில் அருள்மிகு விகடசக்கர விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.
திருமால் சிவபெருமானை ஆயிரம் மலர்களால் அர்ச்சித்து வழிபட்ட போது ஒரு பூ குறைந்ததால், தனது ஒரு கண்ணை மலராகக் கருதி எடுத்து அருச்சித்தார். இந்த செயற்கரிய செயலுக்காக சிவபெருமான் சக்கரத்தை பரிசாக தந்தார். அச்சக்கரம் சலந்தரா சூரனை கொன்றதால் இரத்த கறையுடன் முடைநாற்றம் வீசும் நிலையில் காணப்பட்டது. இதனால் சக்கரத்தை கொடுத்த சிவபெருமானுக்கும் அதனை பெற்ற திருமாலுக்கும் பழி நேர்ந்தது.
இவ்விருவரின் குறைகளையும் பழியையும் நீக்கிட அச்சக்கரத்தை வாங்கி பார்த்த விநாயகர் அதனை திருப்பி தராமல் காலம் தாழ்த்தியுள்ளார். சக்கரம் இல்லாமல் தவித்த திருமாலின் நிலையை கண்ட விஸ்வசேனன் விநாயகரிடம் சென்று அச்சக்கரத்தை வேண்ட விநாயகரோ விகட கூத்தாடி தன்னை மகிழ்வித்து சக்கரத்தை வாங்கி செல் என்று கூறியதால், விஸ்வசேனனும் விநாயகர் சிரிக்கும்படியாக வாயை மூக்கை கோணலாக்கியும் வித்தியாசமாக கூத்தாடினார்.
அதை கண்ட விநாயகரின் துதிக்கையிலிருந்து வழிந்த மதநீரில் அச்சக்கரத்தின் இரத்த கறையை கழுவி தூய்மை படுத்தி, விஸ்வசேனரிடம் சக்கரத்தை கொடுக்க அதனை திருமாலிடம் சேர்த்தார் என்பது ஸ்தல புராணம். இத்திருக்கோயில் 400 ஆண்டுகள் பழமையானதாகும். இத்திருக்கோயிலில் மாதாந்திர சங்கடஹர சதுர்த்தி மற்றும் நித்தியப்படி பூஜை நடைபெற்று வருகிறது. தினசரி சுமார் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.