காஞ்சிபுரம் மாவட்டம் , வட்டம் மற்றும் நகர், ஆலடி பிள்ளையார் கோயில் தெருவில் அருள்மிகு விகடசக்கர விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருமால் சிவபெருமானை ஆயிரம் மலர்களால் அர்ச்சித்து வழிபட்ட போது ஒரு பூ குறைந்ததால், தனது ஒரு கண்ணை மலராகக் கருதி எடுத்து அருச்சித்தார். இந்த செயற்கரிய செயலுக்காக சிவபெருமான் சக்கரத்தை பரிசாக தந்தார். அச்சக்கரம் சலந்தரா சூரனை கொன்றதால் இரத்த கறையுடன் முடைநாற்றம் வீசும் நிலையில் காணப்பட்டது. இதனால் சக்கரத்தை கொடுத்த சிவபெருமானுக்கும் அதனை பெற்ற திருமாலுக்கும் பழி நேர்ந்தது. இவ்விருவரின் குறைகளையும் பழியையும் நீக்கிட அச்சக்கரத்தை வாங்கி பார்த்த விநாயகர் அதனை திருப்பி...