தல பெருமை
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருத்தலையூரில் 63 நாயன்மார்களில் ஒருவரான ருத்ர பசுபதி நாயனார் பிறந்துள்ளார். இத்திருக்கோயில் ருத்ரபசுபதி நாயனாரால் பாடல் பெற்ற தலம் ஆகும். இத்திருக்கோயில் குளத்தில் ருத்ர பசுபதி நாயனார் தன் இரு கைகளையும் தூக்கி அனுதினமும் ருத்ர மந்திரத்தை ஓதி சிவபெருமானை வழிபட்டு மோட்சம் பெற்றார்.