திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருத்தலையூர், அருள்மிகு பாலேஸ்வரா் திருக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில் ஆகும். இவ்வூரில் 63 நாயன்மார்களில் ஒருவரான ருத்ர பசுபதி நாயனார் பிறந்துள்ளார். இத்திருக்கோயில் ருத்ரபசுபதி நாயனாரால் பாடல் பெற்ற தலம் ஆகும். இத்திருக்கோயில் குளத்தில் ருத்ர பசுபதி நாயனார் தன் இரு கைகளையும் தூக்கி அனுதினமும் ருத்ர மந்திரத்தை ஓதி சிவபெருமானை வழிபட்டு மோட்சம் பெற்றார். இந்த திருக்கோயில் கொல்லுமாங்குடி - காரைக்கால் வழித்தடத்தில் கொல்லுமாங்குடியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
| 07:00 AM IST - 12:30 PM IST | |
| 04:00 PM IST - 08:00 PM IST | |
| 12:30 PM IST - 04:00 PM IST | |
| காலை 7.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை திருக்கோயில் நடை திறந்திருக்கும். மதியம் 12.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடை அடைக்கப்பட்டு மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடை திறந்திருக்கும். | |