அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில், திருப்புட்குழி - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Vijayaragava Perumal Temple, Thiruputkuzhi - 631502, Kancheepuram District [TM001702]
×
Temple History
தல பெருமை
இந்தியாவின் சிறந்த கவிஞர் காளிதாசர் காஞ்சிபுரத்தை நகரேஷு காஞ்சி என்று புகழ்ந்து கூறினார். இது ஆன்மீக வாதிகளின் பிருதிவி தலமாகும். அத்தகைய புனித தலத்தில் குமரகோட்டம், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் காமாட்சியம்மன் சக்திபீட கோயிலுக்கும் நடுவில் அமைந்துள்ளது. இது கோயில்களின் சோமஸ்கந்த வடிவமாக குறிக்கிறது. முருகன் கோயிலின் இத்தகைய சோமஸ்கந்தர் அமைப்பு தனித்துவமானது. பிரம்ம பகவான் ஓம் என்பதற்கு பொருளை மறந்துவிட்டார். அவரது அறிமையாமைக்காக பிரம்மாவை சிறையில் வைத்தார். இந்த கோயில் தெய்வம் பாலமுருகர் தனது இருகைகளிலும் ருத்ராட்ச ஜப மாலை மற்றும் இந்த கமலண்டலாவை வைத்திருக்கும் பிரம்ம சாஸ்தா வடிவத்தில் காட்சி தருகிறார்.
சைவர்களின் சிறந்த புராணங்களில் ஒன்றான கந்தபுராணம் அதன் தோற்றம் குமரகோட்டத்தில் நிகழ்ந்தது. தெய்வீக கவிஞர் கச்சியப்ப சிவாச்சாரியார்...இந்தியாவின் சிறந்த கவிஞர் காளிதாசர் காஞ்சிபுரத்தை நகரேஷு காஞ்சி என்று புகழ்ந்து கூறினார். இது ஆன்மீக வாதிகளின் பிருதிவி தலமாகும். அத்தகைய புனித தலத்தில் குமரகோட்டம், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் காமாட்சியம்மன் சக்திபீட கோயிலுக்கும் நடுவில் அமைந்துள்ளது. இது கோயில்களின் சோமஸ்கந்த வடிவமாக குறிக்கிறது. முருகன் கோயிலின் இத்தகைய சோமஸ்கந்தர் அமைப்பு தனித்துவமானது. பிரம்ம பகவான் ஓம் என்பதற்கு பொருளை மறந்துவிட்டார். அவரது அறிமையாமைக்காக பிரம்மாவை சிறையில் வைத்தார். இந்த கோயில் தெய்வம் பாலமுருகர் தனது இருகைகளிலும் ருத்ராட்ச ஜப மாலை மற்றும் இந்த கமலண்டலாவை வைத்திருக்கும் பிரம்ம சாஸ்தா வடிவத்தில் காட்சி தருகிறார்.
சைவர்களின் சிறந்த புராணங்களில் ஒன்றான கந்தபுராணம் அதன் தோற்றம் குமரகோட்டத்தில் நிகழ்ந்தது. தெய்வீக கவிஞர் கச்சியப்ப சிவாச்சாரியார் முருகரால் அருளப்பட்ட கந்தபுராணத்தை திகட சக்கர என்ற வாழ்த்துடன் எழுதியுள்ளார். இந்த வாழ்த்துடன் நிகழ்வு 16 ஆம் நூற்றாண்டில் கோயில் வளாகத்தில் நடத்தப்பட்டுள்ளது. மாதவ சிவஞான முனிவரின் பாடல்களும் புகழை சேர்க்கின்றன. அருணகிரிநாத சுவாமிகள் முருகனை தனது திருப்புகழ் பாடல்களால் வணங்கினார். குமரகோட்டத்தை பாம்பன் சுவாமிகளுக்கு முருகன் வழிகாட்டினார்.
கந்தசஷ்டி - சூரசம்ஹாரத்துடன் தொடர்புடைய திருவிழா, ஐப்பசி மாதத்தில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாக பிரம்மோத்ஸவம் வைகாசி மாதத்தில் மிகுந்த பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
புனித நாட்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், புனித நட்சத்திரங்கள் பரணி, மாத கிருத்திகை, விசாகம் மற்றும் திதி சஷ்டி. பூஜைகள் மற்றும் தினசரி ஆறு கால வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
ஒரு வருடத்தில் 365 நாட்களிலும் முருக பெருமானுக்கு தேன் அபிஷேகம் நடைப்பெறுகிறது. தீபாவளி அன்று அதிகாலை முருகனுக்கு நல்லெண்ணெயால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. இவை வழிபாட்டில் முக்கிய அம்சம் ஆகும்.
குமரகோட்டம் முருகன் பக்தர்களுக்கு அவர்களின் வேண்டுதல்களையும், பிரார்த்தனைகளையும் அனைத்தையும் நிறைவேற்றி அருள்பாலித்து வருகிறார் என்பது சிறப்பு.
வரலாற்றுச் சிறப்பு :
நகரங்களில் சிறந்ததாக புகழ் பெற்று விளங்கும் காஞ்சிபுரத்தில் குமரகோட்டம் வழிபாடு சிறப்பு மிக்க தலமாக விளங்குகிறது. திகட சக்கரச் செம்முக மைந்துளான் என்று வாழ்த்துப் பாடலாக துவங்கும் கந்தபுராணம் அரங்கேற்றம் நடைபெற்றதும் இத்தலத்தில் தான். எனவே, இங்கு அதற்கு முன்பாகவே இருந்திருக்க வேண்டும். கட்டடக் கலை அமைப்பினை பார்க்கும் பொழுது 12-13 ஆம் நூற்றாண்டுகளில் இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது. கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தை அரங்கேற்றிய பின்னர் தொண்டை நாட்டு 24 கோட்டத்தாரும், அவரை பல்லக்கினர் ஏற்றுவித்து நகர் வலம் வரச் செய்தி மரியாதையுடன் சிறப்பு செய்ததாகப் படிக்காசுப் புலவரும் பாடி போற்றியுள்ளார். 1930 ஆம் ஆண்டுகளில் நகரத்தார் இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர்.
. , .
பேரரசர், அருள்மிகு ராமராக தசரத மன்னருக்குப் பிறந்த அருள்மிகு நாராயணன் அனைத்தையும் விட்டுவிட்டு, தந்தை சொன்னபடி காட்டுக்குச் சென்றார். அவர்கள் காட்டுக்குச் சென்றபோது, சீதா பிராட்டியார் மாய மானை பிடித்துத்தருமாறு, அது உண்மையில் மான் அல்ல, ராவணனால் அனுப்பப்பட்ட மாரீசன், பின்னர், ராவணன் சீதா பிராட்டியினை இலங்கைக்கு தூக்கி சென்றான், இலங்கை செல்லும் வழியில், சடாயு எனும் கழுகு இனப்பறவை இராவணனைத் தடுத்து சீதா பிராட்டியரை விடுவிக்க ராவணனுடன் சண்டையிட்டார். இறுதியில், சடாயுவின் இறக்கைகள் இராவணனால் வெட்டப்பட்டு பூமியில் விழுந்தன.
ராமர் லட்சுமணருடன் சீதா பிராட்டியை தேடி அங்கு வந்தபோது, சடாயு நிலத்தில் கீழே விழுந்ததைக் கண்டார்கள். ராவணன் சீதா பிராட்டியை சிறை எடுத்து சென்றுவிட்டதாக சொன்னதும் சடாயு இறந்துவிட்டார். அருள்மிகு ராமர் சடாயுவுக்கு தனது தந்தைக்கு நிகரான நிலையினை கொடுத்ததால், இறுதி சடங்குகள் அனைத்தையும் செய்து சிறிது காலம் அங்கேயே இருந்தார்.
சடாயு வேண்டிக்கொண்டவாறு திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் தனது வடிவுடன் சடாயுவுக்கு இறுதிச் சடங்கைச் செய்த வடிவத்தில் காணப்படுகிறது.
சடாயு புல் காட்சி அளிக்கிறார் (பறவை) இனத்தை சேர்ந்தவர், அவரை குழியில் புதைக்கப்பட்டதால், இத்தலம் திருப்புட்க்குழி என்று அழைக்கப்படுகிறது.
இதிகாச காவியங்களில் ஒன்றான ராமாயணம், சாதி இடைவெளிகளற்றதும், மற்றும் ஒருவருக்கொருவர் மனித அன்பு பற்றி உலகுக்கு விளக்குகிறது. இது மனித சமுதாயத்தின் அனைத்து இதயங்களிலும் சகோதரத்துவ கலாச்சாரத்தை விதைக்கிறது.
வேட்டையாடும் குகன், குரங்கு மனிதரான சுகிரீவன் மற்றும் அரக்கன் குடும்பத்தைச் சேர்ந்தவரான விபீஷனன் ஆகியோர் அருள்மிகு ராமரால் அவரது சொந்த சகோதரர்களாக பாவிக்கப்பட்டனர்.
வயதான பெண்மணியாக இருந்த சபரி, அவருக்கு உணவை வழங்கினார், சாபத்தின் காரணமாக கல்லாக மாறிய அகலிகை, பெண்ணாக உருப்பெற்றார், அருள்மிகு ராமரின் கால்கள் அந்த கல்லின் மேல் பட்டபோது, அவரது தாயின் இடம் வழங்கப்பட்டது. நாம் எந்த சமூகத்தையும் அல்லது சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் கடவுளை அடைய, ஆத்மா தூய்மையாக இருந்தால், நாம் கடாட்சத்தை அடைய முடியும்.
குகன் சுக்ரீவன் மற்றும் விபீஷரை அவரது சகோதரராகவும், சபரி மற்றும் அகலிகையினை அவரது தாயாகவும், பாவித்து அருள்மிகு ராமர் சடாயுவை தனது தந்தையின் ஸ்தானத்தில் வைத்து இறுதி சடங்குகள் அனைத்தையும் செய்தார். அவர் தசரதனிடமிருந்து விலகிச் செல்வதால், அவருக்கு இறுதி சடங்கினை செய்ய இயலாத நிலை என்பதால், அவர் சடாயுவை தனது தந்தை ஸ்தானத்தில் வைத்து, இறுதி சடங்குகளை செய்தார்.
கழுகு என்பது இறந்த உடல்களையும் திசுக்களையும் சாப்பிட்டு வாழும் பறவை. அந்த வகையான பறவைக்கு இறுதி சடங்குகளை செய்வதன் மூலம், அருள்மிகு ராமரின் அன்பு மற்றும் உதவி ஆகியவற்றின் சிறந்த தன்மை மனிதனை நோக்கி மட்டும் நின்றுவிடாமல், விலங்குகளுக்குக் கூட நீடிக்கப்பட்டுள்ளது என்பது உலகிற்கு நன்கு விளக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்தலத்தில், மூலவர் விஜயராகவ பெருமாள். அவர் சடாயுவை கையில் வைத்திருக்கிறார். நாச்சியார்கள் இருவரும் இருபுறமும் காணப்படுகிறார்கள், ஆனால் எதிர் முறையில்.
இந்த கோவிலில், குழந்தைகள் இல்லாத பெண்கள், பயிறினை வறுக்கப்பட்டு தண்ணீருக்குள் ஊறவைத்து, புத்திரபாக்கியம் இல்லாத பெண்களுக்கு வயிற்றில் கட்டப்பட்டு தூங்கச் சொல்லப்படுகிறது. அவர்களின் தூக்கத்திலிருந்து எழுந்த பிறகு, பயிறு முளைத்தால் அவர்கள் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பார்கள் என்பது இத்திருக்கோயிலின் சிறப்பு.
ஒவ்வொரு அமாவாசையிலும் சிறப்பு பூஜைகள் சிறப்பாக செய்யப்படுகிறது.
உடையவர் ராமானுஜரின் குரு, யாதவ பிரகாசர் இத்தலத்தில் அவதரித்து, அருள்மிகு ராமானுஜருக்கு குருகுலவாசம் செய்வித்தார் என்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
இத்திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் 57வது திவ்ய தேசமாகும். திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும்.