Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில், மாமல்லபுரம் - 603104, செங்கல்பட்டு .
Arulmigu Sthalasayana Perumal Temple, Mamallapuram - 603104, Chengalpattu District [TM001718]
×
Temple History

தல பெருமை

தல வரலாறு முன்னொரு காலத்தில் காடுகளால் சூழப்பட்ட இத்திருத்தலத்தில் பல முனிவர்கள் தவம் செய்து வந்தார்கள். அவர்களில் ஒருவர் புண்டரீக மகரிஷி.ஒரு நாள் அருகிலுள்ள திருக்குளத்தில் தாமரை மலர் ஒன்று முனிவரின் சிந்தையைக் கவர்ந்தது. முனிவர் அம்மலரைக் கொய்து பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரமனின் திருவடிகளில் சமர்ப்பிக்க எண்ணி மலரை கடற்கரையில் கடல்நீரைத் தன் கைகளினால் இராப்பகலாக தொடர்ந்து இறைத்து கொண்டிருந்தார்.முனிவரின் தளரா பக்தி உள்ளத்தைக் கண்டு ஸ்ரீமந் நாராயணனும் முனிவருக்கு அருள்புரிய ஒரு முதியவர் கோலத்தில் வந்து ஐயா முனிவரே நான் மிகவும் களைத்துப்போய், பசியோடு வந்திருக்கிறேன். தாங்கள் ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். உமக்குப் புண்ணியம் உண்டு. தாங்கள் வரும்வரை நான் கடல்நீரை இறைத்துக்கொண்டிருக்கிறேன். என்று கூறி தன்...