அருள்மிகு நாகேச்சரசுவாமி திருக்கோயில், திருநாகேச்சரம் - 600069, காஞ்சிபுரம் .
Arulmigu Nageshwara Swamy Temple, Thirunageshwaram - 600069, Kancheepuram District [TM001760]
×
Temple History
தல பெருமை
குன்றத்தூரில் உள்ள திருநாகேசுவரம் அல்லது சடையாண்டீடிஸ்வரர் கோயில் வழிபாடு சிறப்பு பெற்ற திருக்கோயிலாகும். இக்கோயில் வரலாறு கூறும் 45 கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயிலின் காணப்படும் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டில் (கி.பி 1182) சேக்கிழான் புலவப் பெருமாளான துண்டுடக நாடுடையான் (தொண்டை நாடு) விளக்கெரிக்க தானம் அளித்துள்ளான். மேலும் இக்கோயிலில் ரேவதி நட்சத்திர நாளில் இறைவனுக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ள உழந்தை உடையான் வடுகநாதன் என்பவர் தானமளித்துள்ளார். காமாட்சி அம்மன் சன்னதி 1192ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. கோயிலில் பணிபுரிந்த ஆடல் மகளிரும் வழிபாட்டிற்காக தானம் அறித்துள்ளனர். 1206ஆம் ஆண்டில் இக்கோயிலில் திருவூடல் பட்டியாக ஊரார் தானம் அளித்துள்ளனர். இதுபோன்று பலர் வழிபாட்டிற்காக தானம் அளித்த செய்திகளை கல்வெட்டுகள் கூறுகின்றன. கி.பி. 14ஆம்...குன்றத்தூரில் உள்ள திருநாகேசுவரம் அல்லது சடையாண்டீடிஸ்வரர் கோயில் வழிபாடு சிறப்பு பெற்ற திருக்கோயிலாகும். இக்கோயில் வரலாறு கூறும் 45 கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயிலின் காணப்படும் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டில் (கி.பி 1182) சேக்கிழான் புலவப் பெருமாளான துண்டுடக நாடுடையான் (தொண்டை நாடு) விளக்கெரிக்க தானம் அளித்துள்ளான். மேலும் இக்கோயிலில் ரேவதி நட்சத்திர நாளில் இறைவனுக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ள உழந்தை உடையான் வடுகநாதன் என்பவர் தானமளித்துள்ளார். காமாட்சி அம்மன் சன்னதி 1192ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. கோயிலில் பணிபுரிந்த ஆடல் மகளிரும் வழிபாட்டிற்காக தானம் அறித்துள்ளனர். 1206ஆம் ஆண்டில் இக்கோயிலில் திருவூடல் பட்டியாக ஊரார் தானம் அளித்துள்ளனர். இதுபோன்று பலர் வழிபாட்டிற்காக தானம் அளித்த செய்திகளை கல்வெட்டுகள் கூறுகின்றன. கி.பி. 14ஆம் நூற்றாண்டில் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சி காலத்தில் சேக்கிழான் ஆடவல்லான் என்பவரும் செல்வன உத்தமச் சோழ பல்லவரையான் என்பவரும் கோயிலுக்கு நிலம் தானமாக அளித்துள்ளனர். உத்தமச்சோழப் பல்லவராயன் என்பது சேக்கிழார் பெருமானுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயராகும். அப்பெயரையே கொண்டிருந்த ஒருவர் தானமளித்தது சிறப்பு. இக்கோயிலின் கருவறை சுவரில் தேவகோட்டத்தில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்திக்கு சந்தி விளக்கு எரிக்க தானம் அளித்ததாக கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டு கூறுகிறது. கி.பி. 1546ல் விஜயநகர மன்னர் திருநாகேசுவரம் வந்துள்ளார். சேக்கிழார் பெருமானுக்கு தனிக்கோயில் உள்ளது. சேக்கிழார் மரபில் வந்தவர் இவ்வூரில் குளம் எடுத்ததை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த கோயிலாக இக்கோயில் விளங்குகிறது.