அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Ulagalanthaperumal Temple, Kancheepuram - 631502, Kancheepuram District [TM001788]
×
Temple History
தல வரலாறு
இறைவன் மகாவிஷ்ணு நரசிம்மவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை அழித்து பிரகலாதனை காத்து அருளினார். அந்த பிரகலாதன் வழியில்வந்த மகாபலி சக்ரவர்த்தி அறத்தின் வழி நடக்காது ஆட்சி செய்தமையால் அவனை அழிக்க மகாவிஷ்ணு மேற்கொண்ட திரு அவதாரம் திரிவிக்ரம அவதாரம் மகாவிஷ்ணு வாமனனாக வடுரூபத்தில் வந்து மகாபலியிடம் தான் தவம் செய்ய விரும்புவதால் தனக்கென தன் காலால் 3 அடி இடம்கேட்க, மகாபலியும் கொடுக்க நீரேற்று (தாரைவார்த்து) தானம் பெற்ற மூவடியைதன் சேவடி கொண்டு அளக்க திரிவிக்ரமனாய் விண் முட்ட எழுந்தார். பேருரு கண்டு பிரமிப்படைந்த மகாபலி அரசனின் முன்பாக ஒரடியால் உலகையளந்து, மற்றொரு அடியால் விண்ணையும் அளந்து 3வது அடிக்கு இடம் கேட்க அரசன் குனிந்து தலையைக் காட்ட, தம் திருவடியால் தலையை பாதாளத்தில்...இறைவன் மகாவிஷ்ணு நரசிம்மவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை அழித்து பிரகலாதனை காத்து அருளினார். அந்த பிரகலாதன் வழியில்வந்த மகாபலி சக்ரவர்த்தி அறத்தின் வழி நடக்காது ஆட்சி செய்தமையால் அவனை அழிக்க மகாவிஷ்ணு மேற்கொண்ட திரு அவதாரம் திரிவிக்ரம அவதாரம் மகாவிஷ்ணு வாமனனாக வடுரூபத்தில் வந்து மகாபலியிடம் தான் தவம் செய்ய விரும்புவதால் தனக்கென தன் காலால் 3 அடி இடம்கேட்க, மகாபலியும் கொடுக்க நீரேற்று (தாரைவார்த்து) தானம் பெற்ற மூவடியைதன் சேவடி கொண்டு அளக்க திரிவிக்ரமனாய் விண் முட்ட எழுந்தார். பேருரு கண்டு பிரமிப்படைந்த மகாபலி அரசனின் முன்பாக ஒரடியால் உலகையளந்து, மற்றொரு அடியால் விண்ணையும் அளந்து 3வது அடிக்கு இடம் கேட்க அரசன் குனிந்து தலையைக் காட்ட, தம் திருவடியால் தலையை பாதாளத்தில் அழுத்தினார்.
பெருமாள் மேற்கே திருமுக மண்டலத்துடன் திரிவிக்ரம அவதார வடிவத்தில் நின்ற திருக்கோலத்தில் தோற்றமளிக்கிறார். தனது இடது கரத்தினை நீட்டி அதில் இரண்டு விரல்களைக் காட்டி, தனது இரண்டு அடிகளால் மண்ணையும், விண்ணையும் அளந்து முடித்ததை உணர்த்தி, வலது கரத்தில் மீதம் உள்ள ஒரடிக்கு இடம் எங்கே என்று கேட்பது போல் ஒரு விரலைக் காட்டியும் மகாபலியின் திருமுடிமீது வலத் திருவடியை சாத்தியும், இடத் திருவடியை ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் அளந்து விட்டதுபோல் உயர்த்தியும் பெருமாள் கம்பீரமாக. உலகளந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். இந்திருக்கோயிலில் உள்ள உலகளந்த பெருமாளின் பேருருவை கொண்டு திரிவிக்கிரம அவதார உலகளந்த பெருமாளின் திருமுக மண்டலம் சேவை செய்விக்கப்படுகிறது. இத்திருக்கோயில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்தும், ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோயிலுக்கு அருகிலும் அமைந்துள்ளது.