


தல வரலாறு

ஸ்தல வரலாறு இத்திருத்தலம் சுமார் 1200ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப்பழமையானது. இலஞ்சி என்னும் தேசத்தில் சலங்கொண்டபுரம் என்னும் நகரை பகீரதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். இம்மன்னனை காண நாரதமகரிஷி ஓரு முறை வர அம்மன்னன் மிக்க ஆணவதினால் மகரிஷியை அவமதித்தான். மிக்க கோபத்துடன் மகரிஷி வனத்திற்குச் சென்றார். திக்விஜயம் செய்துவரும் அசுரன் கோரனை மகரிஷி கண்டு கர்வம் கொண்டுள்ள பகீரத மன்னனை வென்றால் உனது திக்விஜயம் பூத்தியாகும் என்று சொல்லி சென்றார். அவ்வரசன் கோரன் பகீரத மன்னனை போரில் சென்றான். அனைத்தும் இழந்த பகீரத மன்னன் கானகம் சென்றான். அங்கு நாரதமகரிஷி வருவதை கண்டு விழ்ந்து வணங்கி என்னை மன்னித்து நல்வழிகாட்டிடுங்கள் என்று வேண்டினான். நாரதமகரிஷி மனம் மகிழ்ந்து துர்வாச முனிவரிடம் சென்று வணங்கி...ஸ்தல வரலாறு இத்திருத்தலம் சுமார் 1200ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப்பழமையானது. இலஞ்சி என்னும் தேசத்தில் சலங்கொண்டபுரம் என்னும் நகரை பகீரதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். இம்மன்னனை காண நாரதமகரிஷி ஓரு முறை வர அம்மன்னன் மிக்க ஆணவதினால் மகரிஷியை அவமதித்தான். மிக்க கோபத்துடன் மகரிஷி வனத்திற்குச் சென்றார். திக்விஜயம் செய்துவரும் அசுரன் கோரனை மகரிஷி கண்டு கர்வம் கொண்டுள்ள பகீரத மன்னனை வென்றால் உனது திக்விஜயம் பூத்தியாகும் என்று சொல்லி சென்றார். அவ்வரசன் கோரன் பகீரத மன்னனை போரில் சென்றான். அனைத்தும் இழந்த பகீரத மன்னன் கானகம் சென்றான். அங்கு நாரதமகரிஷி வருவதை கண்டு விழ்ந்து வணங்கி என்னை மன்னித்து நல்வழிகாட்டிடுங்கள் என்று வேண்டினான். நாரதமகரிஷி மனம் மகிழ்ந்து துர்வாச முனிவரிடம் சென்று வணங்கி நல்வழிகாட்டிடுங்கள் என்று முறையிட்டான்.துர்வாச முனிவரின் உபதேசப்படி வெள்ளிக்கிழமை விரதம் இருந்து பாதிரி மரத்தடியில் முருகப்பெருமானை வழிப்பட்டு அழியாப்பேறு பெற்றான். அம்மன்னன் அமைத்த ஆலயமே வல்லக்கோட்டை இத்திருத்தலத்தில் உள்ள ஆலயமாகும்.அவன் வழிபட்ட மூர்த்தியே வள்ளி தெய்வானை தேவியர்களுடன் கூடிய கோடையண்டவர் . திருத்தலத்தின் பெயர் முன்னொரு காலத்தில் வல்லன் என்ற அசுரனின் கோட்டையாக இவ்வூர் இருந்தது. அவ்வரசன் தேவர்களுக்கு பல கொடுமைகளை செய்து வந்தான். தேவர்கள் முருகப்பெருமானிடம் சென்று வீழ்ந்து வணங்கி அசுரனின் கொடுமைகளை கூற அசுரன் அழியும் நேரம் வந்து விட்டது, அஞ்சற்க என்று அபயம் கொடுத்தார். அசுரனை வதஞ்செய்து பின்பு அவ்வசுரனின் வேண்டுகோளுக்கிணங்க இவ்வூர் வல்லன் கோட்டை என்று திகழும் என்றார். அதுவே காலபோக்கில் வல்லக்கோட்டை என மருவியது. அருணகிரிநாதர் சுவாமிகள் கூறும் கோடை நகரம் அருணகிரிநாத சுவாமிகள் தலயாத்திரை செய்து வருகையில் திருப்போரூர் முருகனை வழிபட்டு இரவு தங்கினார். காலையில் திருத்தணிகை செல்லலாம் என்று நினைத்து கொண்டு படுத்து உறங்கினார். கோடை நகர் குமரன் அவரது கனவில் தோன்றி வல்லக்கோட்டையினை மறந்தனையே என்று சொல்லி மறைந்தார். ஸ்ரீ அருணகிரிநாதரும் கண்விழித்து கனவில் கண்ட முருகனை நினைத்து அகமகிழ்ந்து திருத்தணிக்கு செல்லுகையில் வல்லக்கோட்டை ஸ்தலத்திற்கு வந்து முருகப்பெருமானுக்கு எட்டு திருப்புகழ் பாமாலை பாடி சூட்டினார். முதல் திருப்புகழ் ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து ஆகமல மாகி நின்று புவிமீதில் ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து ஆளழக னாகி நின்று விளையாடிப் பூதல மெலாம லைந்து மாதருட னே கலந்து பூமிதனில் வேணு மென்ற பொருள்தேடிப் போகமதி லேயு ழன்று பாழ் நரகெய் தாம லுன்றன பூவடிகள் சேர அன்பு தருவாயே சீதைகொடு போகு மந்த ராவணனை மாளவென்ற தீரனரி நார ணன்றன் மருகோனே தேவர் முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று தேடஅரி தான வன்றன் முருகோனே கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற கோமளிய நாதி தந்த குமரேசா கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட கோடை நகர் வாழ வந்த பெருமாளே இரண்டாம் திருபுகழ் சால நெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து சாமளவ தாக வந்து புவி மீதே சாதகமு மான பின்பு சீறியழு தேகிடந்து தாரணியி லேத வழ்த்து விளையாடிப் பாலனென வேமோ ழிந்து பாகு மொழி மாதர் தங்கள் பாரதன மீத ணைந்து பொருள்தேடிப் பார்மிசையி லேயு ழுன்று பாழ்நர கெய் தாம லொன்று பாத மலர் சேர அன்பு தருவாயே ஆலமமு தாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள் ஆதி முதல் நார யனறன் மருகோனே கோலமகர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ் மடந்தை கோவையமு தூற லுண்ட குமரேசா கூடிவரு சூர டங்க மாளவடி வெலெறிந்த கோடை நகர் வாழ வந்த பெருமாளே மூன்றாம் திருபுகழ் ஏறா னாலே நீறாய் மாயா மேளே வாசக் கணையேலே ஏயா வேயா மாயா வேயா லாமே ழோசைத் தொளையாலே மாறா யூறா யீறாய் மாலாய் வாடா மானைக் கழியாதே வாராய் பாராய் சேரா யானால் வாடா நீபத் தொடை தாராய் சீறா வீறா ஈரெழ் பார்சூழ் சீரார் தோகைக்குமரேசா தேவா சாவா மூவாநாரா தீரா கோடைப் பதியோனே வேறாய் மாறா யாறா மரசூர் வேர்போய் வீழப் பொருதோனே வேதா போதா வேலா பாலா வீரா வீரப் பெருமாளே நான்காம் திருப்புகழ் ஞால மெங்கும் வளைத்தரற்று கடலாலே நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் வசையாலே ஆல முந்து மதித்த ழுற்கும் அழியாதே ஆறி ரண்டு புயத் தணைக்க வருவாயே கோல மொன்று குறத்தி யைத்த ழுவுமார்பா கோடை யம்பதி யுற்று நிற்கு மயில் வீரா கால னஞ்ச வனரத் தொளைத்த முதல் வானோர் கால்வி லங்கு களைத்த றிந்த பெருமாளே ஐந்தாம் திருப்புகழ் தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள் ஓதிய நன்றிம றந்த குண்டர்கள் சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள் பெரியோரை தூஷண நிந்தைய கர்ந்த குண்டர்கள் ஈவது கண்டுத கைந்த குண்டர்கள் சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள் தொலையாமல் வாழிநி னைந்துவ ருந்து குண்டர்கள் நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள் மாவை கந்தைமி குந்த குண்டர்கள் வலையாலே மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள் தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள் வாதைந மன்றனவ ருந்தி டுங்குழி விழுவாரே ஏழு மரங்களும் வங்கு ரங்கெனும் வாலியு மம்பர மும்ப ரம்பரை ராவண னுஞ்சது ரங்க லங்கையு மடைவேமுன் ஈடழி யும்படி சந்தர னுஞ்சிவ சூரிய னுஞ்சுர ரும்ப தம்பெற ராம சரந்தொடு புங்க வந்திரு மருகோனே கோழி சிலம்பந லம்ப யின்றக லாப நடஞ்செய் மஞ்சு தங்கிய கோபுர மெங்குவி ளங்கு மங்கல வயலூர் கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர் வேல னெனும் பெய ரன்பு டன்புகழ் கோடை யெனும்பதி வந்த இந்திரர் பெருமாளே ஆறாம் திருப்புகழ் தோடப் பாமற் றோய்தப் பாணிச் சூழ்துற் றார்துற் றழுவாருந் தூரப் போகக் கோரப் பாரச் சூலப் பாசச் சமனாரும் பாடைக் கூடத் தீயிற் றேறிப் பாழ்பட டேபட் டழியாதே பாசத் தேனைத் தேசுற் றார்பொற் பாதத் தேவைத் தருள்வாயே ஆடற் சூர்கெட் டோடத் தோயத் தாரச் சீறிப் பொரும்வேலா ஆனைச் சேனைக் கானிற் றேனுக் காரத் தாரைத் தரும்வீரா கூடற் பாடித் கோவைப் பாவைக் கூடப் பாடித் திரிவோனே கோலச் சாலிச் சோலைச் சீலக் கோடைத் தேவப் பெருமாளே ஏழாம் திருப்புகழ் வாசித்தநூல் மதங்கள் பேசிக் கொடா தவிந்து வாய்மைப்ர காச மென்று நிலையாக மாசிக்கபால மன்றில் நாசிக்கு ளோடுகின்ற வாயுப்பிராண னொன்றி மடை மாறி யோசித்த யாருடம்மை நேசித்துறு தலைந்து ரோமத்து வார மெங்கு முயிர்போக யோகச்ச மாதி கொண்டு மோகப்ப சாசு மண்டு லோகத்தில் மாய்வ தென்று மொழியாதோ வீசப்ப யோதி துஞ்சி வேதக்கு லால னஞ்ச மேலிட்ட சூர்தடிந்த கதிர்வேலா வீரப்ர தாப பஞ்ச பாணத்தி னாலம் யங்கி வேடிச்சி காலி லன்று விழுவோனே கூசிப்பு காவொ துங்க மாமற்றி காதரிந்த கூளப்பு ராரி தந்த சிறியோனே கோழிப்ப தாகை கொண்ட கோலக்குமார கண்ட கோடைக்குள் வாழ வந்த பெருமாளே எட்டாம் திருப்புகழ் பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான பகரும்வினைச் செயல்மாதர் தருமாயப் படுகுழிபுக் கினிதேறும் வழி தடவித் தெரியாது பழமைபிதற் றிடுலோக றிடுலோக முழுமூடர் உழலும் விருப் புடனோது பாசவலைக் கலைதேடி யொரு பயனைத் தெரியாது விளியாமுன் உன்கமலப் பத நாடி யுருகியுளத் தமுதூற உனது திருப் புகழோத அருள்வாயே தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு திடுதிடெனப் பலபூதர் விதமாகத் திமி திமெனப் பொருசூர னெரு நெறனப் பலதேவர் ஜெய ஜெயெனக் கொதி வேலை விடுவோனே அழகுதரித் திடூநீப சரவணவுற் பவவேல அடல் தருகெற் சீதநீல மயில்வீரா அருணைதிருத் தணிநாக மலைப்பழினிப் பதிகோடை அதிய இடைக்கழிவேவு பெருமாளே திருக்குளத்தின் மகிமை இந்திரன் தமது குலகுருவாகிய பிருகஸ்பதியிடம் முருகனை வழிபடுவதற்கு உத்தமமான தலம் எது என்று கேட்க, பிருகஸ்பதியும் பூலோகத்தில் இருக்கும் வல்லக்கோட்டை தலம் மிக மேலானது என்று சொன்னார். உடன் இந்திரன் இத்தலத்திற்கு வந்து தனது வஜ்ஜிராயுதத்தை ஊன்றி திருக்குளம் உண்டாக்கி இத்தீர்த்தத்தினால் முருகனுக்கு அபிஷேகம் செய்து பூஜித்து வணங்கி இஷ்ட சித்தி பெற்றுச் சென்றான். வஜ்ஜிராயுதத்தால் உண்டாக்கினபடியால் வஜ்ரதீர்த்தம் என்ற பெயர் உண்டாயிற்று. இத்தலத்திற்கு செல்லும் மெய்யன்பர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கி ஆறு எழுத்து மந்திரத்தை ஓதி ஓம் சரவணபவ என்று சொல்லி கோடையாண்டவரை தரிசித்தால் வினைகள் எல்லாம் நீங்கப் பெற்று பேரின்பம் பெறுவது உண்மை.
