உ தோற்றுவாய் சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் என்று மும்முறை ரிக்வேதம் தெரிவிக்கின்றது. சுப்ரமண்ய எனும் சொல் பரமசொரூபத்தைக் குறிப்பதாகும். சுப்பிரமணியர் எனும் பெயருக்குச் சிறந்த வேதங்களுக்குத் தலைவன் என்பது பொருளாம். முக்கட் பகவனின் இளைய திருவுருவாய் அடியார் பெருமக்களால் வணங்கப்படும் தெய்வமாய் முருகப் பெருமான் திகழுகின்றார். உயிர்கள் உய்யும் பொருட்டு இப்பெருமான் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள தலங்கள் பலவாகும். அவற்றுள் வல்லக்கோட்டை எனும் திருத்தலமும் ஒன்றாகும். இதன் சிறப்புகளை இங்கு அறிந்துகொள்வோம். அமைவிடம் காஞ்சிபுரம்...