அருள்மிகு சுவேதாரண்யேசுவர சுவாமி திருக்கோயில், திருவெண்காடு - 609114, மயிலாடுதுறை .
Arulmigu Suvedaranyeswaraswamy Temple, Thriuvengadu - 609114, Mayiladuthurai District [TM018027]
×
Temple History
தல பெருமை
காசிக்கு இணையான ஆறு ஸ்தலங்களில் ஒன்று திருவெண்காடாகும். ஆதி சிதம்பரம் என்றழைக்கப்பெறும் இத்தலம் வான்மீகி இராமாயணத்தில் இடம் பெறும் சிறப்புடையது. சோழநாட்டுத் திருப்பதிகம் பெற்ற காவிரி வடகரையில் 11-வது ஸ்தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையால் பெருமைகளை உடையது. ஸ்ரீசுவேதாரணியேசுவரர், ஸ்ரீநடராஜப்பெருமான், ஸ்ரீஅகோரர் என்று மூன்று மூர்த்திகள், சோம, சூரிய, அக்கினி என்ற மூன்று தீர்த்தங்கள், வடலால், கொன்றை, வில்வம் என்ற மூன்று தல விருட்சங்கள் எனத் தனிச்சிறப்புடைய ஸ்தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய நால்வரும் இத்தல இறைவன் பேரில் தேவாரத் திருப்பதிகங்கள் அருளியுள்ளனர். திருவெண்காடராகிய பட்டினத்தடிகள் இத்தலத்தில் பிறந்து வாழ்ந்தவர்....காசிக்கு இணையான ஆறு ஸ்தலங்களில் ஒன்று திருவெண்காடாகும். ஆதி சிதம்பரம் என்றழைக்கப்பெறும் இத்தலம் வான்மீகி இராமாயணத்தில் இடம் பெறும் சிறப்புடையது. சோழநாட்டுத் திருப்பதிகம் பெற்ற காவிரி வடகரையில் 11-வது ஸ்தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையால் பெருமைகளை உடையது. ஸ்ரீசுவேதாரணியேசுவரர், ஸ்ரீநடராஜப்பெருமான், ஸ்ரீஅகோரர் என்று மூன்று மூர்த்திகள், சோம, சூரிய, அக்கினி என்ற மூன்று தீர்த்தங்கள், வடலால், கொன்றை, வில்வம் என்ற மூன்று தல விருட்சங்கள் எனத் தனிச்சிறப்புடைய ஸ்தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய நால்வரும் இத்தல இறைவன் பேரில் தேவாரத் திருப்பதிகங்கள் அருளியுள்ளனர். திருவெண்காடராகிய பட்டினத்தடிகள் இத்தலத்தில் பிறந்து வாழ்ந்தவர். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான திருச்செங்காட்டங்குடி சிறுதொண்டரின் மனைவியரான திருவெண்காட்டு நங்கையும் அவர் பணிப்பெண்ணான சந்தன நங்கையும் இத்தலத்தைச் சார்ந்தவர்களே. பெண்ணாகடத்து அச்சுதகளப்பாளர் தமக்குப் பிள்ளைப்பேறில்லாத குறை நீங்கும் பொருட்டு தமது குல குருவான திருத்துறையூர்- அருணந்தி சிவாச்சாரியரிடம் விண்ணப்பிக்க அவர் தேவாரத்தில் கயிறு சார்த்திப் பார்த்து ஆணையிட்டவண்ணம், தாமும் தம் மனைவியும் இத்தலத்தில் தங்கி முக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டு ஒரு ஆண்மகவைப் பெற்றெடுத்து சுவேதவனப்பெருமான் என்ற திருநாமம் பெற்ற அந்த இளங்குழந்தையே சைவ சித்தாந்தத் தலைமணி நூலான சிவஞானபோதத்தை உலகுக்களித்த மெய்கண்டதேவராவர். நவகிரகங்களில் ஒருவரான புதன் பகவான் தனி சன்னதி வீற்றிருந்து அருள்பாளிக்கிறார்.