Arulmigu Parimalarenganathar Temple, Thiruinthalur, Mayiladuthurai - 609001, Mayiladuthurai District [TM018041]
×
Temple History
தல வரலாறு
பஞ்சரங்க தலங்களுள் திருஇந்தளூர் பரிமளரங்கமாக விளங்குகிறது.
மது கைடபன் என்ற அசுரர்கள் வேதங்களைப் பறித்துச் சென்றதனால் இறைவன் மச்சாவதாரம் எடுத்து மது, கைடபர்களை வதம் செய்து வேதங்களை மீண்டும் பெற்றுத்தந்தார். வேதங்களுக்கு அசுர சம்பந்தத்தாலேற்பட்ட மாற்றத்தைப் போக்கி நல்ல மணத்தை பரிமளம் உண்டு பண்ணியமையால் பரிமள ரெங்கநாதர் என இறைவன் அழைக்கப் பெறுகின்றனர். வேதங்களுக்கு பரிமளத்தைத் கொடுத்தத் தலமானபடியால் இங்குள்ள மூலஸ்தான விமானத்திற்கு வேதாமோத விமானம் என்ற பெயர் வழங்குகிறது. காவிரித்தாயார் கங்கையைக் காட்டிலும் சிறப்புப்பெற வேண்டுமென்று இத்தலத்தில் தவமியற்ற அவ்வண்ணமே உனது கரை மருங்குகளிலே நான் திருக்கோயில் கொண்டு உனக்குப் புண்ணியத்தை தருகிறேன் எனக்கூறி திருவரங்கப்பட்டினம், திருவரங்கம், அப்பாலரங்கம் கோயிலடி, திருகுடந்தை மத்தியரங்கம், திருஇந்தளூர் பரிமளரங்கம் என ஐந்து தலங்களில் சிறப்பாக...பஞ்சரங்க தலங்களுள் திருஇந்தளூர் பரிமளரங்கமாக விளங்குகிறது.
மது கைடபன் என்ற அசுரர்கள் வேதங்களைப் பறித்துச் சென்றதனால் இறைவன் மச்சாவதாரம் எடுத்து மது, கைடபர்களை வதம் செய்து வேதங்களை மீண்டும் பெற்றுத்தந்தார். வேதங்களுக்கு அசுர சம்பந்தத்தாலேற்பட்ட மாற்றத்தைப் போக்கி நல்ல மணத்தை பரிமளம் உண்டு பண்ணியமையால் பரிமள ரெங்கநாதர் என இறைவன் அழைக்கப் பெறுகின்றனர். வேதங்களுக்கு பரிமளத்தைத் கொடுத்தத் தலமானபடியால் இங்குள்ள மூலஸ்தான விமானத்திற்கு வேதாமோத விமானம் என்ற பெயர் வழங்குகிறது. காவிரித்தாயார் கங்கையைக் காட்டிலும் சிறப்புப்பெற வேண்டுமென்று இத்தலத்தில் தவமியற்ற அவ்வண்ணமே உனது கரை மருங்குகளிலே நான் திருக்கோயில் கொண்டு உனக்குப் புண்ணியத்தை தருகிறேன் எனக்கூறி திருவரங்கப்பட்டினம், திருவரங்கம், அப்பாலரங்கம் கோயிலடி, திருகுடந்தை மத்தியரங்கம், திருஇந்தளூர் பரிமளரங்கம் என ஐந்து தலங்களில் சிறப்பாக சயனித்திருக்கிறார். மக்கள் கங்கையில் நீராடி பாவங்களை கழித்து வருவதால் தனக்கேற்பட்ட பாவம் நீங்க கங்கையே துலா ஐப்பசி மாதத்தில் இங்கு வந்து காவிரியில் நீராடுவதால் திருஇந்தளூர் கங்கையைவிட காவிரிக்கு முக்கியத்துவம் கொடுத்த தலம்.
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்ய, ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடுகயலுகள மாயனை, மன்னுவடமதுரை மைந்தனை, தூயபெருநீர் யமுனை துறைவனை, ஆயர்குலத்தில் தோன்றும் மணிவிளக்கை, தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை, மருவினிய மைந்தனை தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது, வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க நூற்றெட்டு திவ்யதேசங்களுள் மிக முக்கியமான திருஇந்தளூரில் அருள்மிகு பரிமளரெங்கநாதர் என்ற திருநாமத்துடன் இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளுரீரே என்று திருமங்கை ஆழ்வார் பாடியுள்ள பாசுரத்தின் படி இந்தளூர் அரங்கன் துலா உற்சவத்தை கண்டு பேரருள் பெற வேண்டுகிறோம். திருக்கோயில் கொண்டிருக்கும் மருவினிய மைந்தனுக்கு துலாப் பெருந்திருவிழா கீழ்கண்டவாறு சிறப்பாக நடைபெறும்.
இத்தகு சிறப்பான ஒருவிழாவை கண்டு முன்னைவண்ணம், பாலின் வண்ணம், முழுதும் நிலைநின்ற பின்னை வண்ணம், கொண்டல் வண்ணம், வண்ணம் எண்ணுங்கால் பொன்னின் வண்ணம், மனியின் வண்ணம், புரையும் திருமேனியைக்கண்டு வேதங்களின் தூய மணம்கமழ துயிலும் அருள்மிகு பரிமளரெங்கநாதர் திருவருள் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுகிறோம்.
வைஷ்ணவ 108 திவ்ய தேசங்களிலேயே இந்த திவ்ய தேசத்தில் தான் ஐப்பசி மாதம் 1ந் தேதி முதல் கார்த்திகை மாதம் 1ந் தேதி வரை காவேரி உஸ்தவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சமாகும்.
தல பெருமை
கோயில் வழிபாடு முறை.
முதலில் துவஜஸ்தம்பத்தில் கொடிமரம் நமஸ்காரம் செய்துவிட்டு அப்படியே ஸ்ரீராமர் சன்னதி சென்று பெரியபிரகாரம் சென்று ஸ்ரீஆஞ்சநேயரை தரிசனம் செய்து வைகுண்ட ஏகாதசி மண்டபம் வழியாக துவஜஸ்தம்பம் வழியாக பிரதட்சனமாக கருடனை சேவித்து பிறகு கட்டகோபுரம் சென்று துவாரபாலகர் முன்பு சேவித்து விட்டு ஆழ்வார் சன்னதி சென்று சேவித்து விட்டு சக்கரத்தாழ்வார் சன்னதி சேவித்து பிறகு பன்னீர் மரத்தடியில் பெருமாள் விமான வேதாமோதவிமானம் சேவித்த பிறகு ஸ்ரீபரிமளரங்கநாயகியை சேவித்து உட்பிரகாரம் சென்று ஸ்ரீஆண்டாள், ஸ்ரீசேனைமுதலியார், ஸ்ரீநரசிம்மன், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன், சேவித்துவிட்டு துவார பாலகர்கள் சேவித்து பிறகு உட்சந்நிதி ஸ்ரீபரிமளரெங்கனை சேவிக்க வேண்டும.கோயில் வழிபாடு முறை.
முதலில் துவஜஸ்தம்பத்தில் கொடிமரம் நமஸ்காரம் செய்துவிட்டு அப்படியே ஸ்ரீராமர் சன்னதி சென்று பெரியபிரகாரம் சென்று ஸ்ரீஆஞ்சநேயரை தரிசனம் செய்து வைகுண்ட ஏகாதசி மண்டபம் வழியாக துவஜஸ்தம்பம் வழியாக பிரதட்சனமாக கருடனை சேவித்து பிறகு கட்டகோபுரம் சென்று துவாரபாலகர் முன்பு சேவித்து விட்டு ஆழ்வார் சன்னதி சென்று சேவித்து விட்டு சக்கரத்தாழ்வார் சன்னதி சேவித்து பிறகு பன்னீர் மரத்தடியில் பெருமாள் விமான வேதாமோதவிமானம் சேவித்த பிறகு ஸ்ரீபரிமளரங்கநாயகியை சேவித்து உட்பிரகாரம் சென்று ஸ்ரீஆண்டாள், ஸ்ரீசேனைமுதலியார், ஸ்ரீநரசிம்மன், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன், சேவித்துவிட்டு துவார பாலகர்கள் சேவித்து பிறகு உட்சந்நிதி ஸ்ரீபரிமளரெங்கனை சேவிக்க வேண்டும.